ஆப்நகரம்

உயர்கிறதா ரயில் கட்டணம்? ரயில்வே வாரியத் தலைவர் சூசகம்!

ரயில் கட்டணம் விரைவில் முறைப்படத்தப்படவுள்ளது என ரயில்வே வாரியத் தலைவர் தெரிவித்துள்ளார்.

Samayam Tamil 27 Dec 2019, 10:14 am
2014ஆம் ஆண்டு பயணிகள் ரயில் கட்டணத்தில் 14.2 சதவிகிதமும் சரக்கு கட்டணத்தில் 6.6 சதவிகிதம் அதிகரிக்கப்பட்டது. அதன்பின் ரயில் கட்டணம் உயர்த்தப்படவில்லை.
Samayam Tamil உயர்கிறதா ரயில் கட்டணம்


இந்நிலையில் இந்த நிதியாண்டின் இறுதிக்குள் ரயில்வே ரூ.20,000 கோடிக்கு மேல் வருவாய் பற்றாக்குறையைச் சந்தித்து வருவதாக கூறப்படும் நிலையில் விரைவில் கட்டண உயர்வு அமல்படுத்தப்படலாம் எனக் கூறப்படுகிறது.

ரயில்வே வாரியத் தலைவா் வி.கே.யாதவ், டெல்லியில் நேற்று (டிசம்பர் 26) செய்தியாளா்களைச் சந்தித்த போது, “ரயில்வே நிா்வாகத்தின் வருவாய் குறைந்து வருகிறது. எனவே, பயணிகள் டிக்கெட் கட்டணத்தையும், சரக்கு ரயில் கட்டணத்தையும் முறைப்படுத்த இருக்கிறோம். பயணக் கட்டணத்தை உயா்த்துவது என்பது உணா்வுப்பூா்வமான விவகாரமாகும். ஏதோ ஒரு நடவடிக்கை இருக்கும். என்னால் அதிகம் கூற முடியாது" என்று கூறினார்.

சமூக வலைதளங்களில் கருத்து பதிவிட்ட 124 பேர் கைது!

மேலும் அவர், “ரயில்வேயில் சரக்குக் கட்டணங்கள் ஏற்கனவே அதிகமாக இருந்தாலும், சாலைப் போக்குவரத்தில் இருந்து ரயில்வேக்கு அதிக போக்குவரத்தை ஈர்ப்பதே எங்களது இப்போதைய இலக்கு” என்று தெரிவித்தார்.

மோடி-ஷா சிக்னல் காட்டுனா போதும் போராட்டக்காரர்களை முடிச்சிருவோம்: மிரட்டுகிறதா பாஜக?

பெட்ரோல், டீசல் விலை உயர்வு, மற்றும் அனைத்துத் துறைகளிலும் ஏற்பட்டுள்ள பொருளாதார மந்த நிலை காரணமாக விலைவாசி உயர்வு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் ரயில் கட்டணம் உயர்த்தப்பட்டால் மேலும் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையில் அது கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது.

அடுத்த செய்தி