ஆப்நகரம்

கொரோனாவை பரப்பிய போலீஸ் டிஎஸ்பி மீது கிரிமினல் வழக்கு..! பீதியில் நடுங்கியுள்ள சிட்டி

கொரோனா தடுப்பு நடவடிக்கையை மீறிய தெலுங்கானா போலீஸ் டிஎஸ்பி மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எதிர்பார்ப்பு.

Samayam Tamil 25 Mar 2020, 2:28 pm
தெலுங்கானா மாநிலம் கம்மம் மாவட்டத்தில் உள்ள கொத்த கூடம் நகரில் போலீஸ் டிஎஸ்பி ஆக பணியாற்றி வருபவர் ஆலி. அவருடைய மகன் வேலை விஷயமாக இங்கிலாந்துக்கு சென்றுவிட்டு கடந்த 18ஆம் தேதி நாடு திரும்பினார்.
Samayam Tamil கொரானா பாதிக்கப்பட்ட மகனுடன் ஊர் சுற்றிய போலீஸ் டிஎஸ்பி


வெளிநாட்டிலிருந்து வந்தவர்களை தனிமைப்படுத்தி கண்காணிக்க வேண்டும் என்ற நடைமுறை அப்போதே அமலில் இருந்தது. எனவே போலீஸ் டிஎஸ்பி ஆலி மகனை தெலுங்கானா மாநில சுகாதாரத்துறை அதிகாரிகள் வீட்டிலிருந்து வெளியே செல்லக்கூடாது என்று வீட்டிலேயே தனிமைப்படுத்தி கண்காணிப்பிற்கு உட்படுத்தி இருந்தனர்.

ஆனால் இந்த விஷயத்தை வெளியே சொல்லாமல் மறைத்து வைத்த டிஎஸ்பி, தன்னுடைய மகனை உடன் அழைத்து கொண்டு பல இடங்களுக்கு சென்று வந்தார். இது தவிர கம்பம் மாவட்ட ஆட்சியர், போலீஸ் எஸ்பி ஆகியோர் நடத்திய ஆலோசனைக் கூட்டங்களிலும் அவர் கலந்து கொண்டார். மேலும் கொத்த கூடம் அருகிலுள்ள தன்னுடைய சொந்த ஊருக்கும் மகனை அழைத்து சென்று வந்தார்.

இப்படி பல ஊர்களுக்கும் பல இடங்களுக்கும் அவர்கள் சென்று வந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன் டிஎஸ்பி ஆலி மகனுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
எனவே அவரை ஐதராபாத்தில் உள்ள மகாத்மா காந்தி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று அதிகாரிகள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இந்த நிலையில் டிஎஸ்பி ஆலி, அவருடைய வீட்டில் வேலை செய்யும் வேலைக்கார பெண் ஆகியோருக்கும் கரோனா தொற்று ஏற்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டு அவர்களுக்கும் ஹைதராபாத்தில் உள்ள காந்தி மனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

மேலும் டிஎஸ்பி ஆலி வீட்டில் வேலை செய்த பெண்ணின் 22 மாத பெண் குழந்தை, அந்தப் பெண் சென்று வந்த இடங்களில் வசிக்கும் பொதுமக்கள் ஆகியோரையும் தனிமைப்படுத்தி அவர்களை பரிசோதனைக்கு உட்படுத்தும் முயற்ச்சியில் தெலங்கானா மாநில சுகாதாரத்துறை அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

வண்டி ரெடி; வீட்டிற்கே வரும் அத்தியாவசியப் பொருட்கள் - அசத்தும் மாநில அரசு!

இடைப்பட்ட நாட்களில் டிஎஸ்பி ஆலியுடன் நேரடி தொடர்பில் இருந்தவர்கள், அலுவல் ரீதியாக நடத்தப்பட்ட ஆலோசனை கூட்டங்களில் டிஎஸ்பி ஆலியுடன் கலந்துகொண்ட போலீஸ் அதிகாரிகள், வருவாய்த்துறை அதிகாரிகள், அவர்களுடைய குடும்பத்தார் ஆகியோரும் சுயமாக கரோனா மருத்துவப் பரிசோதனைக்கு தங்களை உட்படுத்தி கொண்டுள்ளனர்.

வெளி நாட்டில் இருந்து வருபவர்களை 14 நாட்கள் கண்காணிப்பில் வைத்திருக்க வேண்டும் என்பது பற்றிய சட்ட நடைமுறைகளை தெரிந்த ஒரு போலீஸ் அதிகாரியின் செயல்பாடு காரணமாக அவருக்கும், அவருடைய வீட்டில் வேலை செய்யும் வேலைக்கார பெண்ணுக்கும் கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

அவருடைய செயல்பாடுகள் காரணமாக இன்னும் எத்தனை பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது என்பது நடைபெற இருக்கும் மருத்துவ பரிசோதனை மட்டுமே தெரியவரும்.

இந்த நிலையில் அவர் மீது கொத்த கூடம் காவல்நிலையத்தில் கிரிமினல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. போலீஸ் அதிகாரி ஒருவர் கரோனா வியாதி பரவுவதற்கு காரணமாக இருந்த காரணத்தால் அவரை பணியிலிருந்து நீக்கி அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை தெலுங்கானா மாநிலத்தில் ஏற்பட்டுள்ளது.

கொத்த கூடம் டிஎஸ்பி ஆலி செயல்பாடு காரணமாக அங்கு வசிக்கும் சாதாரண பொதுமக்கள் பெரும் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர்.

அடுத்த செய்தி