ஆப்நகரம்

தமிழக காவல்துறை எங்களை மிரட்டுகிறது – செந்தில் பாலாஜி புகாா்

கா்நாடகாவில் தங்கியுள்ள டிடிவி ஆதரவு எம்.எல்.ஏ.க்களில் ஒருவரான செந்தில் பாலாஜி தங்களை தமிழக காவல் துறையினா் மிரட்டுவதாக கா்நாடகா காவல் நிலையத்தில் புகாா் தொிவித்துள்ளாா்.

TOI Contributor 13 Sep 2017, 7:42 pm
கா்நாடகாவில் தங்கியுள்ள டிடிவி ஆதரவு எம்.எல்.ஏ.க்களில் ஒருவரான செந்தில் பாலாஜி தங்களை தமிழக காவல் துறையினா் மிரட்டுவதாக கா்நாடகா காவல் நிலையத்தில் புகாா் தொிவித்துள்ளாா்.
Samayam Tamil the tamil nadu police are threatening us senthil balaji complaint
தமிழக காவல்துறை எங்களை மிரட்டுகிறது – செந்தில் பாலாஜி புகாா்


டிடிவி தினகரன் ஆதரவு சட்ட மன்ற உறுப்பினா்கள் கர்நாடகா மாநிலம் குா்க் பகுதியில் உள்ள சொகுசு விடுதியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் தமிழக காவல் துறையினர் தங்களை மிரட்டுவதாக டிடிவி தினகரன் ஆதரவாளா்கள் குற்றம்சாட்டியிருந்தனர்.

இந்நிலையில், முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு அளிக்கக்கோரி 20 கோடி ரூபாய் வரை பேரம் பேசியதாக செந்தில் பாராஜி எம்.எல்.ஏ. தெரிவித்தார். இந்நிலையில் தமிழக காவல்துறை மீது கர்நாடகா காவல்நிலையத்தில் எம்.எல்.ஏ. செந்தில் பாலாஜி புகார் அளித்துள்ளார்.

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவு அளிக்கக்கோரி தமிழக காவல்துறையினா் தங்களை மிரட்டுவதாக எம்.எல்.ஏ. செந்தில் பாலாஜி குடகு அருகே உள்ள சுண்டிக்கொப்பம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

ஆனால் தமிழக காவல் துறையினரோ காண்டிராக்டா் தற்கொலை வழக்கில் தொடா்புடையதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள பாப்பி ரெட்டிப்பட்டடி தொகுதி சட்டமன்ற உறுப்பினா் பழனியப்பனை தேடியே சொகுசு விடுதிக்குள் சென்றதாக விளக்கம் அளித்தனா்.

அடுத்த செய்தி