ஆப்நகரம்

குழந்தை கடத்தல் விவகாரம் : தம்பதிக்கு ஒன்றரை ஆண்டு சிறை

திருப்பதி ஏழுமலையான் கோயில் அருகே 9 மாத குழந்தை கடத்தி செல்லப்பட்ட வழக்கில் கைதான தம்பதிக்கு ஒன்றரை ஆண்டு சிறை தண்டனை அளித்து திருப்பதி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

TNN 5 Oct 2017, 7:42 pm
திருப்பதி ஏழுமலையான் கோயில் அருகே 9 மாத குழந்தை கடத்தி செல்லப்பட்ட வழக்கில் கைதான தம்பதிக்கு ஒன்றரை ஆண்டு சிறை தண்டனை அளித்து திருப்பதி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Samayam Tamil the tirupati court gives one and half years jail for the couple for child trafficking
குழந்தை கடத்தல் விவகாரம் : தம்பதிக்கு ஒன்றரை ஆண்டு சிறை


கடந்த ஜுன் மாதம்14 ஆம் தேதியன்று ஆந்திர மாநிலம் அனந்தப்பூர் மாவட்டத்தை சேர்ந்த 9 மாத குழந்தை சென்ன கேசவன், ஏழுமலையான் கோயில் அருகே மர்ம நபர்களால் கட த்தப்பட்டான்.

இது தொடர்பாக சிசிடிவி காட்சிகளை வைத்து கடத்தல்காரர்களை போலிசார் தேடி வந்த நிலையில், நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த தங்காயி, அசோக் தம்பதியினர் பேளுக்குறிச்சி காவல்நிலையத்தில் சரண் அடைந்தனர்.

அதையடுத்து திர்ப்பதி போலிசார் குழந்தையை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர். இது தொடர்பான வழக்கை விசாரித்த குற்றவியல் நீதிமன்றம், கட த்தலில் ஈடுபட்ட தம்பதிக்கு, ஒன்றரை ஆண்டுகள் சிறை தண்டனையும், தலா 400 ரூபாய் அபராதமும் விதித்து உத்தரவிட்டது.

the tirupati court gives one and half years jail for the couple for child trafficking

அடுத்த செய்தி