ஆப்நகரம்

இந்தியாவில் 220 லட்சம் டன் உப்பு உற்பத்தி: ஹெம் பாண்டே

உத்திரபிரதேச மாநிலத்தில் உப்புக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக கிளம்பிய வதந்தியால் ஒரு கிலோ உப்பு ரூ.200க்கு விற்பனையானது.

TNN 12 Nov 2016, 1:47 pm
உத்திரபிரதேச மாநிலத்தில் உப்புக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக கிளம்பிய வதந்தியால் ஒரு கிலோ உப்பு ரூ.200க்கு விற்பனையானது.
Samayam Tamil the total production of salt in india on an average is about 220 lakh tonnes
இந்தியாவில் 220 லட்சம் டன் உப்பு உற்பத்தி: ஹெம் பாண்டே


நேற்று மாலை உத்திரபிரதேச மாநிலத்தில் உப்புக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும் இன்றே வாங்கி இருப்பு வைத்துக்கொள்ளவில்லை என்றால் இன்னும் சில மாதங்களுக்கு உப்பு கிடைக்காது என்றும் தகவல் வெளியானது.

நாடு முழுவதும் பரவிய இந்த தகவல் தொடர்பாக மத்திய நுகர்வோர் விவகாரத்துறை அமைச்சகத்தின் செயலாளர் ஹெம் பாண்டே கூறுகையில், நாட்டில் உப்புத்தட்டுபாடு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுவது வெறும் வதந்தி மட்டுமே. இதனை யாரும் நம்ப வேண்டாம். இந்தியாவில் மட்டும் 220 லட்சம் டன் உப்பு உற்பத்தி செய்யப்படுகிறது. இதில் 60 லட்சம் டன் உள்நாட்டு நுகர்வோருக்கு பயன்படுத்தப்படுகிறது. மீதியுள்ள உப்பு வெளிநாட்டிற்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது என்று கூறியுள்ளார். மேலும், கிட்டத்தட்ட 22 அத்தியாவசிய பொருட்களின் விலை தினசரி கண்காணிக்கப்பட்டு வருகிறது என்று குறிப்பிட்டுள்ளார்.

Department of Consumer Affairs Government of India have been informed about the rumoured increase in the prices of salt in some parts of the country. The Department monitors the prices of 22 Essential Commodities on daily basis.

அடுத்த செய்தி