ஆப்நகரம்

ஆலங்கட்டி மழையால் மகாராஷ்டிராவில் இருவர் பலி- பயிர்கள் நாசம்!!

மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று அதிகாலை பெய்த ஆலங்கட்டி மழைக்கு இருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும், அறுவடைக்கு இருந்த பயிர்கள் நாசமானதால் விவசாயிகள் சோகத்தில் உள்ளனர்

Samayam Tamil 11 Feb 2018, 4:04 pm
மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று அதிகாலை பெய்த ஆலங்கட்டி மழைக்கு இருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும், அறுவடைக்கு இருந்த பயிர்கள் நாசமானதால் விவசாயிகள் சோகத்தில் உள்ளனர்.
Samayam Tamil the unusual spell of hailstorm and heavy rainfall that started early morning today has claimed 2 lives in maharashtra
ஆலங்கட்டி மழையால் மகாராஷ்டிராவில் இருவர் பலி- பயிர்கள் நாசம்!!


மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று காலை கனமழையுடன் கூடிய ஆலங்கட்டி மழை பெய்தது. அரிதாக பெய்த ஆலங்கட்டி மழையினால், 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

மேலும், இந்த ஆலங்கட்டி மழையின் காரணமாக ஜால்னா, பீடு, புல்தானா, வாஷிம், அமராவதி, மற்றும் அகோலா மாவட்டங்களில் உள்ள கோதுமை, திராட்சை மற்றும் சுண்டல் போன்ற பயிர்களும் செடிகளும் கனமழையில் நாசமாகின. அதுமட்டுமின்றி, அறுவடைக்கு தயாராக இருந்த பயிர்கள் மழையில் நாசமானதால் விவசாயிகள் மிகுந்த சோகத்தில் உள்ளனர்.

அடுத்த செய்தி