ஆப்நகரம்

''லூடோ'' கேமில் கணவனை தோற்கடித்ததால் விபரீதம்... முதுகெலும்பு உடைந்து மனைவிக்கு சிகிச்சை...

மனைவியால் அடிக்கடி தோற்று போவதை பொறுத்துக்கொள்ளாத நபர் மனைவியின் முதுகெலும்பு உடையும் வரை அடித்திருக்கும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Samayam Tamil 27 Apr 2020, 2:35 pm
குஜராத் மாநிலம் வதோதரா மாவட்டத்தைச் சேர்ந்த நபர் அங்குள்ள தனியார் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். தற்போது கொரோனா ஊரடங்கில் அனைத்து கம்பெனிகளும் மூடப்பட்டதால், அவர் வேலையிழந்து வீட்டில் இருந்து வந்தார். குடும்ப பிரச்சனைகளை சமாளிக்க அவரது மனைவி பள்ளி குழந்தைகளுக்கு டியூஷன் எடுத்து வந்தார்.
Samayam Tamil லூடோ கேம்


மேலும் அவர் பியூட்டிஷன் வகுப்பையும் முடித்துள்ளார். இந்த நிலையில் இவர் லூடோ கேம் ஆப்பை பதிவிறக்கம் செய்து நேரம் கிடைக்கும் போது விளையாடி வந்துள்ளார். வேலையின்றி வீட்டில் வெறுப்பாக இருந்த கணவருக்கும் அந்த கேமை பதிவிறக்கம் செய்து கொடுத்த அவர், தன்னுடன் விளையாடும்படி கூறினார். இதையடுத்து தனது கணவருடன் லூடோ கேமை விளையாடிவந்த பெண், தொடர்ச்சியாக அவரை தோற்கடித்துள்ளார்.

இதை பொறுத்துக்கொள்ள முடியாத அந்த நபர், தனது மனைவியுடன் வாக்குவாதம் செய்ததோடு, '' நீ என்னை மதிப்பதில்லை, என்னை எப்படி தோற்கடிப்பாய் என்றெல்லாம் கூறி அடித்து உதைத்துள்ளார். இதனால் பலத்த காயம் அடைந்த அப்பெண்ணுக்கு முதுகெலும்பே உடைந்துள்ளது. பின்னர், அந்த பெண் எலும்பியல் அறுவை சிகிச்சை நிபுணரிடம் அழைத்துச் செல்லப்பட்டு சிகிச்சை பெற்றார். மருத்துவமனை உதவியுடன் அப்பெண்ணுக்கும், கணவருக்கும் மனநல ஆலோசனைகளும் வழங்கப்பட்டன.

2 மாநிலங்களைத் தவிர எல்லா மாநிலங்களும் ஊரடங்கை விலக்க விருப்பம்

அது குறித்து பேசிய மருத்துவர், இது ஒரு ஈகோ சார்ந்த பிரச்சனைதான். கணவர் வருமானம் இழந்த நிலையில், இந்த பெண் சாமர்த்தியமாக செயல்பட்டு வீட்டு கடன்களை அடைத்து வருகிறார். மேலும் சின்ன சின்ன விஷயங்களிலும் இவர் மிக சாதுரியமாக செயல்பட்டு வருவதால் அவருடைய கணவரால் அதை ரசிக்க முடியவில்லை. இந்த சம்பவத்துக்கு பின், அப்பெண் தன்னுடைய பெற்றோர் வீட்டுக்கு செல்வதாக கூறியுள்ளார். ஆனால் கணவன் மீது காவல் நிலையத்தில் புகார் கொடுக்க அவர் விரும்பவில்லை. தனது பெற்றோர் வீட்டில் சிறிது நாட்கள் தங்கிவிட்டு பின்னர் கணவர் வீட்டுக்கு செல்வேன் என தெரிவித்ததாகவும் கூறினார்.

அடுத்த செய்தி