ஆப்நகரம்

''பிரதமரே வந்தாலும் தடுப்பேன்'' அமைச்சர் காரை நிறுத்திய பெண் போலீஸ் ராஜினாமா..!

சூரத் அருகே அமைச்சர் மகனின் காரை வழி மறித்து நடவடிக்கை எடுத்த கான்ஸ்டேபிள் சுனிதா யாதவ் ராஜினாமா...

Samayam Tamil 13 Jul 2020, 4:41 pm
குஜராத் மாநிலம் சூரத் நகரில் கடந்த புதன் கிழமை அன்று இரவு 10 மணி அளவில் ஊரடங்கை மீறி வந்த காரை அங்கு பணியில் ஈடுபட்டிருந்த கான்ஸ்டேபிள் சுனிதா யாதவ் தடுத்து நிறுத்தியுள்ளார். அப்போது, காரில் குஜராத் பாஜக அமைச்சர் குமார் கனானியின் மகன் பிரகாஷ் கனானி மற்றும் அவரது நண்பர்கள் இருந்தது தெரியவந்தது.
Samayam Tamil surat sunita yadav


எனினும், கொரோனா ஊரடங்கை மீறியும், மாஸ்க் எதுவும் அணியாமல் அலட்சியமாக இருந்ததாலையும் சுனிதா யாதவ் அவர்களை கண்டித்ததாக கூறப்படுகிறது. ஆனால், அமைச்சரின் மகன் என்ற அதிகாரத்தினால், பிரகாஷ் கனானி மற்றும் அவர்களது நண்பர்கள் ஆகியோர் கான்ஸ்டேபிள் சுனிதாவை மதிக்காமல், பதிலுக்கு பதில் பேசியதோடு தங்களை விடுவிக்க வேண்டும் என கட்டளையிட்டுள்ளனர்.

ஆனால், அவசரம் போன்ற எந்த காரணமும் இல்லாமல், வேண்டுமென்றே ஊரை சுற்றிய அவர்களை விடுவிக்க மறுத்த சுனிதா, ஊரடங்கி மீறினால் பிரதமரே இருந்தாலும் தவறுதான் என்று கூறி, வாலிபர்கள் மீது நடவடிக்கை எடுக்க காவல் நிலையத்துக்கு உடனே தகவல் கொடுத்துள்ளார். ஆனால், அமைச்சர் மகனையும், அவரது நண்பர்களையும் உடனே விடுவிக்குமாறு அதிகாரிகள் கூறியுள்ளனர்.

இது தொடர்பான வீடியோ சமூக ஊடகங்களில் வெளியாகி வைரலானாதையடுத்து, சுனிதா யாதவின் செயலை பாராட்டியும், அமைச்சர் மகனை கண்டிடும் நெட்டிசன்கள் கருத்துக்களை பதிவு செய்து வந்தனர். இந்நிலையில் கடந்த ஞாயிற்று கிழமை அன்று பிரகாஷ் கானானி மற்றும் அவரது கூட்டாளிகள் கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமீனில் வெளிவந்தனர். இதற்கிடையில் கான்ஸ்டேபிள் சுனிதா யாதவ் மருத்துவ விடுப்பில் சென்றதாக தகவல் வெளியானது.

அமைச்சர் மகனின் காரை மறித்ததற்கு பின்னர் சுனிதா யாதவ் விடுப்பில் சென்ற தகவல் வெளியாகி நெட்டிசன்களிடையே சலசலப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், அவர் தனது பணியை ராஜினாமா செய்துவிட்டதாக மற்றொரு தகவல் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அது தொடர்பான தகவல், '' சுனிதா யாதவ் ராஜினாமா கடிதம் கொடுத்துள்ளார்.

தேபேந்திரநாத்: தன் வீட்டு முன்பே தூக்கில் தொங்கிய பாஜக எம்.எல்.ஏ... தற்கொலைதானா?

ஆனால் அவரது ராஜினாமா ஏற்கப்படவில்லை. ராஜினாமாவை அப்படியே ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் பின்பற்ற வேண்டிய நடைமுறை உள்ளது என்றும் காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதே சமயம், கான்ஸ்டேபிள் சுனிதா மீது பல்வேறு புகார்கள் உள்ளதாகவும், சம்பவம் நடந்த அன்றுகூட அவர் கடுமையாக நடந்து கொண்டதாகவும் கூறப்படுகிறது.

அடுத்த செய்தி