ஆப்நகரம்

நாளை முதல் திரையரங்குகள் திறப்பு: ஆந்திர அரசு அனுமதி!

கொரோனா பரவல் காரணமாக மூடப்பட்டிருந்த திரையரங்குகள் மூன்று மாதங்களுக்கு பின்னர் நாளை ஆந்திராவில் திறக்கப்படுகிறது.

Samayam Tamil 30 Jul 2021, 11:18 am
கொரோனா இரண்டாவது அலை காரணமாக நாடு முழுவதும் பல்வேறு கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்தன. மூன்று மாதங்களுக்கும் மேலாக கடுமையான கட்டுப்பாடுகள் அமலில் இருந்தன.
Samayam Tamil theatre open


பாதிப்பு குறைந்து வருவதால் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. வழிபட்டு தலங்கள், திரையரங்குகள், மால்கள், கடைகள் அனைத்தும் இயங்குவதற்கும் தடை விதிக்கப்பட்டிருந்தது. அதேபோல ஆந்திர மாநிலத்திலும் கொரோனா இரண்டாம் அலை காரணமாக கடந்த மூன்று மாதங்களாக திரையரங்குகள் மூடப்பட்ட நிலையிலேயே இருந்தது.
தமிழ்நாட்டில் அடுத்தகட்ட ஊரடங்கு: எதற்கெல்லாம் அனுமதி?
இந்நிலையில், ஆந்திராவில் கொரோனா பரவல் குறைந்ததால் கடந்த ஜூலை 8ஆம் தேதி முதல் 50 சதவீத பார்வையாளர்களுடன் திரையரங்குகளை இயக்கலாம் என ஆந்திர அரசு அனுமதி வழங்கியது. ஆனால் 50 சதவீத பார்வையாளர்கள் மட்டும் திரையரங்குக்கு வந்தால் மிகுந்த நஷ்டம் ஏற்படும் என திரையரங்கு உரிமையாளர்கள் மற்றும் திரைப்பட விநியோகஸ்தர் சங்கங்கள் இடையே தகராறு ஏற்பட்டதால் ஜூலை 8ஆம் தேதி திரையரங்குகள் திறக்கப்படவில்லை.

தற்போது ஜூலை 31-ஆம் தேதி அதாவது நாளை ஆந்திர மாநிலம் முழுவதிலும் சி சென்டர்களில் உள்ள தியேட்டர்கள் இயங்குவதற்கு ஆந்திர அரசு அனுமதி வழங்கியுள்ளது.

ஆனால் 50 சதவீத பார்வையாளர்களை மட்டுமே அனுமதிக்க வேண்டும் எனவும், திரையரங்குக்கு வரக்கூடிய பார்வையாளர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் எனவும் ஆந்திர அரசு வலியுறுத்தியுள்ளது .
பிடிஆர் போடும் பட்ஜெட்: ஸ்டாலின் அடிக்கும் மூன்று சிக்சர்: வெளியாகும் செம அறிவிப்பு!
ஆந்திராவில் திரையரங்குகள் திறக்கப்படும் நிலையில் தமிழகத்திலும் கோரிக்கைகள் வலுப்பெற்று வருவதால் தமிழக அரசும் இது குறித்து முக்கிய அறிவிப்பை இன்று அல்லது நாளை அறிவிக்கும் என கூறப்படுகிறது.

அடுத்த செய்தி