ஆப்நகரம்

ஜனவரி 5ஆம் தேதி முதல் திரையரங்குகளை திறக்க அனுமதி

கேரளாவில் ஜனவரி 5ஆம் தேதி முதல் திரையரங்குகளை திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது

Samayam Tamil 1 Jan 2021, 8:19 pm
கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதம் முதல் சினிமா தியேட்டர்கள் மூடப்பட்டன. இதன் விளைவாக புதிய படங்களை ரிலீஸ் செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்தச் சிக்கலுக்கு தீர்வுகாணும் நோக்கில் சில படங்கள் ஓடிடி தொழில்நுட்பத்தில் ஆன்-லைனில் ரிலீஸ் செய்யப்பட்டன.
Samayam Tamil கோப்புப்படம்
கோப்புப்படம்


இதனிடையே, கொரோனா பரவலை கட்டுக்குள் கொண்டு வரும் நடவடிக்கையாக தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வந்த பொது முடக்கம் வருகிற 31ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. தேசிய பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழ் நாடு முழுவதும் பொது முடக்கத்தை நீட்டித்துள்ள மத்திய அரசு, UNLOCK நடைமுறையின் கீழ் பல்வேறு தளர்வுகளை அளித்துள்ளது.

அதன்படி, திரையரங்குகள் 50 சதவீதம் இருக்கைகளுடன் கடந்த ஆண்டு அக்டோபர் 15ஆம் தேதி முதல் இயங்க அனுமதிக்கப்பட்டுள்ளது. இதற்கான நிலையான வழிகாட்டு நெறிமுறைகளும் வெளியிடப்பட்டுள்ளன. இருப்பினும், பல்வேறு மாநிலங்களில் திரையரங்கங்கள் திறக்கப்படவில்லை.

திருப்பதிக்கே அதிர்ச்சி அளித்த 2020; அப்படியென்ன நடந்தது தெரியுமா?

இந்த நிலையில், கேரளாவில் ஜனவரி 5ஆம் தேதி முதல் திரையரங்குகளை திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 50 சதவீத பார்வையாளர்களுடன் திரையரங்குகளை திறக்க அனுமதி அளித்துள்ள அம்மாநில அரசு பல்வேறு கட்டுப்பாடுகளையும் விதித்துள்ளது. அதுதவிர, ஜனவரி 5ஆம் தேதி முதல் வழிபாட்டு தலங்கள், கலை நிகழ்ச்சிகள், பொதுநிகழ்ச்சிகளுக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி