ஆப்நகரம்

காஷ்மீர் விவகாரத்தில் பாகிஸ்தான் தலையிட உரிமை இல்லை: ராகுல் அதிரடி ட்வீட்!!

காஷ்மீர் இந்தியாவின் உள்நாட்டுப் பிரச்சனை. இதில் தலையிடுவதற்கு பாகிஸ்தான் உள்பட வேறு எந்த நாடுகளுக்கும் உரிமை இல்லை என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

Samayam Tamil 28 Aug 2019, 1:05 pm
அரசுடன் பல்வேறு விஷயங்களில் மாறுபட்டு இருந்தபோதும், இந்த விஷயத்தில் வேறுபடுகிறேன் என்று ராகுல் தெரிவித்துள்ளார். காஷ்மீரில் நடக்கும் வன்முறைகள் பாகிஸ்தானால் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது என்று தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
Samayam Tamil RG 2


அவரது பதிவில், ''ஜம்மு காஷ்மீரில் வன்முறை நடந்து வருகிறது. பாகிஸ்தான் ஆதரவால்தான் அந்த வன்முறை நடந்து வருகிறது. உலகம் முழுவதும் தீவிரவாதத்தை பாகிஸ்தான் பரப்பி வருகிறது'' என்று தெரிவித்துள்ளார்.

ஆர்பிஐ பணத்தை பிரதமர், நிதியமைச்சர் திருடி விட்டதாக ராகுல் குற்றச்சாட்டு!!

காஷ்மீரில் அசாதாரண சூழல் நிலவுவதாகவும், பார்ப்பதற்கு அனுமதிக்க வேண்டும் என்று ராகுல் காந்தி கோரியிருந்தார். ராகுலை அந்த மாநில ஆளுநர் சத்ய பால் மாலிக் வரவேற்று இருந்தார். இதையடுத்து கடந்த வாரம் சனிக்கிழமை எதிர்க்கட்சித் தலைவர்களை அழைத்துக் கொண்டு ராகுல் காந்தி காஷ்மீர் சென்றார். ஆனால், அவர் ஸ்ரீநகரில் தடுத்து நிறுத்தப்பட்டார்.

ஜம்மு காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்துக்கு எதிரான வழக்கு அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றம்!!

தற்போது ஜம்மு காஷ்மீர் விஷயத்தில் மத்திய அரசுடன் ஒத்து சென்றுள்ளார். இது அரசியல் வட்டாரத்தில் வரவேற்பை பெற்றுள்ளது.

அடுத்த செய்தி