ஆப்நகரம்

4 வருஷம் ஆகுதாம்; ரயிலில் தலையணை, போர்வைகளை துவைச்சி: அதிரவைத்த சிஏஜி அறிக்கை...!

ரயிலில் பயன்படுத்தப்படும் தலையணை, போர்வை உள்ளிட்டவைகளை துவைத்து 4 ஆண்டுகள் ஆவதாக சிஏஜி அறிக்கை தெரிவித்துள்ளது.

TNN 24 Jul 2017, 11:02 am
டெல்லி: ரயிலில் பயன்படுத்தப்படும் தலையணை, போர்வை உள்ளிட்டவைகளை துவைத்து 4 ஆண்டுகள் ஆவதாக சிஏஜி அறிக்கை தெரிவித்துள்ளது.
Samayam Tamil think twice before using blankets in train
4 வருஷம் ஆகுதாம்; ரயிலில் தலையணை, போர்வைகளை துவைச்சி: அதிரவைத்த சிஏஜி அறிக்கை...!


ரயிலின் குளிர்சாதனப் பெட்டிகளில் பயன்படுத்தப்படும் தலையணைகள், போர்வைகள் உள்ளிட்டவற்றை சுத்தப்படுத்த ரயில்வே நிர்வாகம் விதிமுறைகளை வகுத்துள்ளது. அதன்படி ஒவ்வொரு பயண முடிவில்/ மாத இறுதியில் / 2 அல்லது 3 மாதத்திற்கு ஒரு முறை என ரயில் துணிகளை துவைக்க வேண்டும். இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை, சிஏஜி எனப்படும் மத்திய தணிக்கை குழுவினர் அறிக்கை ஒன்றை நாடாளுமன்றத்தில் சமர்பித்தனர்.

அதில், ரயில்வே நிர்வாகத்தின் விதிமுறைகள் முறையாக பின்பற்றப்படாதது தெரியவந்தது. 9 ரயில்வே கோட்டங்களுக்கு உட்பட்ட 14 டிப்போவில், 3 ஆண்டுகளாக எந்தவித துணிகளையும் துவைக்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 2015-16 காலக் கட்டத்தில் 8 ரயில்வே கோட்டங்களுக்கு உட்பட்ட 12 டிப்போவில் 626 மாதங்களுக்கு ஒருமுறை மட்டுமே துணிகள் துவைக்கப்படுகின்றன.

அவற்றில் மும்பை, கொல்கத்தா, குவாலியர், கௌஹாத்தி, திப்ருகார், லக்னௌ, செகந்திராபாத், ஹாதியா, டாடா நகர் ஆகியவை அடங்கும். சென்னை பேசின் பிரிட்ஜ் டிப்போவில் பயன்படுத்தப்பட்ட போர்வைகளைக் கொண்டு, தலையணைகள் தைப்பது தெரியவந்துள்ளது.

Think twice before using blankets, pillows in your next train journey.

அடுத்த செய்தி