ஆப்நகரம்

நாட்டின் ஒற்றுமையை சீர்குலைக்கும் செயல்: தருண் விஜய்

திருவள்ளுவர் சிலை அகற்றம் நாட்டின் ஒற்றுமையை சீர்குலைக்கும் என பாஜக எம்பி தருண் விஜய் தெரிவித்துள்ளார்.

TNN 18 Jul 2016, 11:04 pm
புதுதில்லி: திருவள்ளுவர் சிலை அகற்றம் நாட்டின் ஒற்றுமையை சீர்குலைக்கும் என பாஜக எம்பி தருண் விஜய் தெரிவித்துள்ளார்.
Samayam Tamil thiruvalluvar statue removal will disrupt the countrys unity tarun vijay
நாட்டின் ஒற்றுமையை சீர்குலைக்கும் செயல்: தருண் விஜய்


உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்வாரில் கங்கை நதிக்கரையில் 12 அடி உயர திருவள்ளுவர் சிலை அமைக்க, பாஜக எம்பி தருண் விஜய் ஏற்பாடு செய்தார்.

முதலில் கர்கிபாரி என்ற இடத்தில் சிலை அமைக்க முடிவு செய்யப்பட்டது. ஆனால் உள்ளூர் பூசாரிகள் எதிர்ப்பு தெரிவித்ததால், அங்கு சிலை நிறுவப்படவில்லை.

இதையடுத்து, சங்கராச்சாரியா சவுக் என்ற இடத்தில் வைக்க திட்டமிடப்பட்டது. ஆனால் அதற்கும் எதிர்ப்பு கிளம்பியதால், டாம்கோட் பகுதியில் உள்ள பொதுப்பணித்துறை அலுவலக வளாகத்தில் தற்காலிகமாக திறக்கப்பட்டது. ஆனால், தற்போது கருப்பு நிற பிளாஸ்டிக் பையில் சுற்றப்பட்டும், ஹரித்வாரில் உள்ள பூங்கா ஒன்றில் வைக்கப்பட்டுள்ளது.

இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள பாஜக எம்பி தருண் விஜய், திருவள்ளுவர் சிலை அகற்றம் நாட்டின் ஒற்றுமையை சீர்குலைக்கும் என கண்டனம் தெரிவித்துள்ளார்.

அரசின் அனுமதி பெற்றே சிலை நிறுவப்பட்டது. ஆனால் எவ்வித தகவலும் அளிக்காமல் அரசு அதிகாரிகள் அந்த சிலையை அப்புறப்படுத்தியுள்ளனர். இச்சம்பவத்தில் தொடர்புடைய அனைத்து அதிகாரிகள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தருண் விஜய் காட்டம் தெரிவித்துள்ளார்.

மேலும், ஹரித்வார் ஆட்சியரை பணியிடை நீக்கம் செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ள அவர், இது தொடர்பாக உத்தரகாண்ட் மாநில ஆளுநர் மற்றும் தலைமை செயலருக்கு கடிதம் எழுதியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

அடுத்த செய்தி