ஆப்நகரம்

இது வரலாற்று தீர்ப்பு..! - பாபா ராம்தேவ்

அயோத்தியில் மசூதி கட்டவுள்ள இஸ்லாமிய சகோதரர்களுக்கு இந்து உறவுகள் உதவ வேண்டும் என யோகா குறு பாபா ராம்தேவ் கூறியுள்ளார்.

Samayam Tamil 9 Nov 2019, 2:34 pm
1992 டிசம்பர் 6 மற்றும் 2019 நவம்பர் 9 இந்த இரு தேதி நிகழ்வுகளும் வரலாற்றில் பதிவாகிவிட்டன. ஒன்று பாபர் மசூதி இடிக்கப்பட்ட நாள் மற்றொன்று அயோத்தி நில வழக்கில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கிய நாள்.
Samayam Tamil இது வரலாற்று தீர்ப்பு..! -  பாபா ராம்தேவ்


''ஒரு மதம் மற்றொரு மதத்தின் நம்பிக்கையை கெடுக்க கூடாது. பாபர் மசூதி என்று அழைக்கப்படும் அந்த கட்டிடத்தின் கட்டமைப்பில் இஸ்லாம் கட்டுமானம் கிடையாது. அகழ்வாராய்ச்சியின் ஆய்வுகளை நிராகரிக்க முடியாது''. என்ற பல ஆதாரங்களை முன்னிறுத்தி நீதிபதி ரஞ்சன் தலைமையிலான அரசியல் சாசன அமர்வு அயோத்தி வழக்கில் தீர்ப்பு வழங்கியுள்ளது.

இத்தனை வருடங்களை கடந்த இந்த சர்ச்சையான வழக்கிற்கு இன்று முற்று புள்ளி வைக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் மாற்று கருத்துக்களை கொண்ட கட்சிகளும் கூட இந்த தீர்ப்புக்கு ஆதரவாகத்தான் கருத்தை பதிவு செய்துள்ளனர்.

அயோத்தி வழக்கு தீர்ப்பு: காங்கிரஸ் நிலைப்பாடு என்ன?

யோகா குரு பாபா ராம்தேவ் தெரிவித்தது '' இது ஒரு வரலாற்று தீர்ப்பு. விரைவில் ஒரு பெரிய ராமர் கோயில் கட்டப்படும். முஸ்லீம் தரப்புக்கு மாற்று நிலங்களை ஒதுக்குவதற்கான முடிவு வரவேற்கத்தக்கது. இஸ்லாமியர்கள் கட்டவுள்ள மசூதியின் கட்டிட வேலைகளுக்கு இந்து உறவுகள் உதவுவார்கள் என நம்புகிறேன்''.

மதநல்லிணக்கத்தை முன்னெடுத்து அயோத்தி தீர்ப்பை அணுகுங்கள் என கட்சி தலைவர்கள் உட்பட பலரும் கூறி வருகின்றனர். தமிழகத்தில் ஸ்டாலின் '' அனைத்து தரப்பினரும் சமமான சிந்தனை மற்றும் மத நல்லிணக்கத்துடன் இந்த தீர்ப்பை முன்னெடுக்க வலியுறுத்தியுள்ளார்.

அயோத்தி வழக்கு தீர்ப்பு: மோடி ரியாக்‌ஷன்!

நடிகர் ரஜினி தெரிவித்தது '' உச்ச நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை நான் ஏற்கிறேன். நாட்டின் வளர்ச்சிக்காக அனைத்து மதத்தினரும் ஒன்றிணைந்து பாடுபட வேண்டும் என கூறினார்.

அடுத்த செய்தி