ஆப்நகரம்

ஆம் ஆத்மிக்காக ஆம் ஆத்மியின் பட்ஜெட்: கெஜ்ரிவால் புகழாரம்

ஆம் ஆத்மிக்காக ஆம் ஆத்மி கட்சியால் தயாரிக்கப்பட்ட பட்ஜெட் என தில்லி சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்யப்பட்ட 2015-16-ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் குறித்து தில்லி முதலவர் அரவிந்த் கெஜ்ரிவால் புகழாரம் சூடியுள்ளார்.

Hindustan Times 28 Mar 2016, 5:56 pm
புதுதில்லி: ஆம் ஆத்மிக்காக ஆம் ஆத்மி கட்சியால் தயாரிக்கப்பட்ட பட்ஜெட் என தில்லி சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்யப்பட்ட 2015-16-ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் குறித்து தில்லி முதலவர் அரவிந்த் கெஜ்ரிவால் புகழாரம் சூடியுள்ளார்.
Samayam Tamil this is budget of aam aadmi by the aam aadmi arvind kejriwal
ஆம் ஆத்மிக்காக ஆம் ஆத்மியின் பட்ஜெட்: கெஜ்ரிவால் புகழாரம்


ஆம் ஆத்மி என்றால் சாதாராண மனிதன் (பாமர மனிதன்) என்று பொருள். இதனை முன்னிறுத்தி கெஜ்ரிவால் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

மேலும், தனியார் பள்ளிகளை விட அரசு பள்ளிகளின் தரம் உயர்த்தப்படும். மேற்கில் இருந்து கற்றுக் கொள்ளவேண்டும் என நாம் கூறுகிறோம். ஆனால், தில்லியிடம் இருந்து கற்றுக் கொள்ள வேண்டும் என அமெரிக்கா தற்போது கூறுகிறது. பெண்கள் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும். தில்லி முழுவதும் கண்காணிப்பு கேமிராக்கள் பொறுத்தப்படும் என்றார்.

தில்லி சட்டப்பேரவையில் 2015-16-ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. தில்லி நிதியமைச்சர் மனிஷ் சிசோடியா பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இந்த நிதியாண்டுக்கு பட்ஜெட்டில் ரூ.46,600 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. அதில் ரூ.9,836 கோடி கல்வித்துறைக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

தில்லி மாநகராட்சிக்கு ரூ.6,919 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டை விட ரூ.1000 கோடி அதிகமாகும்.

அடுத்த செய்தி