ஆப்நகரம்

பள்ளி கழிப்பறையை தினசரி சுத்தம் செய்யும் தலைமை ஆசிரியர்

கர்நாடக மாநிலத்தின் அரசு பள்ளியை சேர்ந்த தலைமை ஆசியர் தினமும் பள்ளி கழிப்பறையை சுத்தம் செய்து வருகிறார்.

Samayam Tamil 21 Nov 2018, 3:56 pm
கர்நாடக மாநிலத்தின் அரசு பள்ளியை சேர்ந்த தலைமை ஆசியர் தினமும் பள்ளி கழிப்பறையை சுத்தம் செய்து வருகிறார்.
Samayam Tamil bathroom


கர்நாடக மாநிலத்தில் உள்ள சாமராஜசநகர்மாவட்டத்தில் உள்ள ஹொன்கஹலிஎனும் பகுதியில் ஆரம்ப பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றி வருபவர் மகதேஸ்வரா சுவாமி.

இப்பள்ளியை எப்படியாவது நல்ல நிலைக்கு கொண்டுவர வேண்டும் என எண்ணிய மகதேஸ்வர சுவாமி, அதற்காக பல்வேறு செயல்களை செய்து வருகிறார். இவர் தனது சொந்த செலவில் குழ்தைகளுக்காக நூலகத்தை அமைத்துள்ளார். மேலும் அவர் பள்ளியில் தோட்டம் அமைத்து அதையும் பாதுகாத்து வருகிறார்.

மற்ற அரசு பள்ளி ஆசிரியர்கள் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதற்கு மகதேஷ்வர சுவாமி சிறந்த முன்உதாரணம் என அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.

பள்ளிக்கு காலையில் வந்தததும் கழிவறையை சுத்தும் செய்யும் மகதேஷ்வர சுவாமி, அதன்பின் அங்குள்ள செடிகளுக்கு தண்ணீர் ஊற்றுவது என மற்ற வேலைகளை கவனிக்கிறார். அதனைத்தொடர்ந்து சரியான நேரத்தில் ஆசிரியர் பணியை மேற்கொள்கிறார்.

அத்துடன் எப்படி சுத்தமாக இருக்க வேண்டும் என மாணவர்களுக்கும் சிறந்த முறையில் அறிவுரை வழங்குகிறார் மகதேஷ்வர சுவாமி. தலைமை ஆசிரியரின் சிறப்பான பணியால் தங்களது குழந்தைகளை நாள் தவறாமல் தினசரி பள்ளிக்கு அனுப்பவதாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.

அடுத்த செய்தி