ஆப்நகரம்

''வீட்டுக்கு மருமகன் வர்றாராம்'' அசத்திய மாமியார்... அசந்துபோன உறவினர்கள்..!

ஆந்திர மாநிலத்தில் வீட்டுக்கு வருகை தரும் மருமகனுக்காக 67 வகை உணவுகளை செய்து வைத்து அசத்திய மாமியாரின் விருந்தோம்பல் நிகழ்வு இனையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Samayam Tamil 9 Jul 2020, 5:25 pm
இந்திய நாகரீகத்தில் மாப்பிள்ளை வீட்டினருக்கு, பெண் வீட்டார் செய்யும் ஒவ்வொரு சடங்கு காரியங்களிலும் தனி அக்கறை செலுத்துவது வழக்கம். அதற்கு காரணம், பெண் கொடுத்தவர்கள் நிச்சயதார்த்தம் முதல் மணமகளை புகுந்த வீட்டுக்கு வழி அனுப்பி வைக்கும் வரையில் எந்த குறையும் இருக்கக்கூடாது என்பதுதான். அதோடு மட்டுமின்றி, விருந்துக்கு வரும் மாப்பிள்ளைக்கு எது பிடிக்கும் எது பிடிக்காது என்பதை அறிந்துகொண்டு போதும் என்ற அளவுக்கு உபசரிப்புகளும் நடக்கும்.
Samayam Tamil andhra women cooking for son in law


ஆனால், இதெல்லாம் ஒரு காலத்தில் பெண் வீட்டாரே பார்த்து பார்த்து செய்து செய்து வந்தார்கள். இப்போது அதற்கெல்லாம் நேரம் இல்லாதது போல, வெளியில் ஆர்டர் செய்தோ அல்லது ஸ்விகி, சோமாட்டோ மூலம் ஆர்டர் செய்தோ பெரும்பாலும் விருந்து நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர்.

இப்படியான சூழ்நிலையில், தனது மருமகனுக்காக வீட்டில் காலடி எடுத்து வைக்கும் போது குடிக்க கொடுக்கும் பானம் முதல் விருந்து முடிந்து சாப்பிடும் பீடா வரை மாமியாரே தனது கை வண்ணத்தில் செய்திருக்கும் நிகழ்வு மெய் சிலிர்க்க வைத்துள்ளது.


ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த அந்த பெண்மணி, மருமகனுக்காக 67 வகை உணவுகளை சமைத்துள்ளார். அந்த உணவுகள் மொத்தம் 5 கட்டமாக பிரிக்கப்பட்டுள்ளன. அருஞ்சுவை எனப்படும் ஆறு வகை சுவைகளில் உணவுகளை தயார் செய்து அதனை ஒவ்வொன்றாக விவரித்து வீடியோ வெளியிட்டுள்ளார்.

அந்த வீடியோ தற்போது மின்னல் வேகத்தில் பரவி, பல்வேறு கருத்துக்களை பெற்று வருகிறது.

அடுத்த செய்தி