ஆப்நகரம்

வாரணாசி பாரதமாதா கோயிலில் இந்தியாவின் ‘மார்பிள் மேப்’

வாரணாசியில் உள்ள பழமையான பாரதமாதா கோயிலில் மார்பிள் மூலம் இந்திய வரைபடம் உருவாக்கப்பட்டுள்ளது.

Samayam Tamil 2 Aug 2018, 9:05 am
வாரணாசியில் உள்ள பழமையான பாரதமாதா கோயிலில் மார்பிள் மூலம் இந்திய வரைபடம் உருவாக்கப்பட்டுள்ளது.
Samayam Tamil BharatMataMandir


உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசியில் மகாத்மா காந்தி காசி வித்யாபீத் வளாகத்தில் பாரதமாதா கோயில் உள்ளது. 1918ஆம் ஆண்டில் தொடங்கி 1924ஆம் ஆண்டு இந்தக் கோயில் கட்டிமுடிக்கப்பட்டுள்ளது. இதனைச் சுதந்திரப் போராட்ட வீரரான சிவ் பிரசாத் குப்தா கட்டியுள்ளார்.

இக்கோயிலை மகாத்மா காந்தி 1936ஆம் ஆண்டு அக்டோபர் 25ஆம் தேதி திறந்துவைத்துள்ளார். இக்கோயிலில் மாபெரும் இந்திய வரைபடம் ஒன்று தரையில் மக்ரானா மார்பிள் மூலம் வரைப்பட்டிருக்கிறது. இது பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், மியான்மர் மற்றும் வங்கதேசம் ஆகியவற்றையும் உள்ளடக்கிய சுதந்திரத்திற்கு முந்தைய இந்தியாவின் தோற்றமாக உள்ளது.
“சுற்றுலாப் பயணிகள் ஏராளமானவர்கள் இக்கோயிலைப் பார்க்க வருகை தருகிறார். ஒரு காலத்தில் எவ்வளவு பரந்து விரிந்த நாடாக இந்தியா இருந்துள்ளது என்று அவர்கள் வியக்கின்றனர்” என கோயில் பாதுகாவலர் ஒருவர் கூறுகிறார்.

அடுத்த செய்தி