ஆப்நகரம்

10 கோடி ரூபா காரு, அலங்காரம் எதுவும் ஜனாதிபதிக்கு இந்த வருஷம் கிடையாது!

கொரோனா காரணமாக நாடே தவித்து வருவதால் அரசு மேற்கொண்டுள்ள ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகள் சில...

Samayam Tamil 15 May 2020, 11:09 am
கொரோனா காரணமாக நாட்டின் பொருளாதாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் குடியரசுத் தலைவருக்கு ரூ. 10 கோடி செலவில் தயாராகவிருந்த விலை உயர்ந்த லிமோசைன் கார் வேண்டாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Samayam Tamil 10 கோடி ரூபா காரு, அலங்காரம் எதுவும் ஜனாதிபதிக்கு இந்த வருஷம் கிடையாது!
10 கோடி ரூபா காரு, அலங்காரம் எதுவும் ஜனாதிபதிக்கு இந்த வருஷம் கிடையாது!


ஆண்டுதோறும் குடியரசுத் தின அணி வகுப்பு மிக விமரிசையாக நடத்தப்படும். இந்நிலையில், இந்த ஆண்டு அதுபோல் நடக்காது என்றும் மக்கள் பணச் செலவு குறைக்கப்படும் என்றும் குறிப்பிட்டு அரசு சில அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. அரசின் இந்த முடிவுகளுக்கு கொரோனா ஊரடங்கு காரணமாக நாட்டு மக்கள் பொருளாதார ரீதியாக படும் சிரமங்கள் முன்னிறுத்தப்படுகிறன.

2021 ஜனவரி 26ஆம் தேதியன்று நடக்கும் அணி வகுப்பிற்குக் குறைந்த செலவில் குடியரசுத் தலைவர் மாளிகை அலங்காரம் செய்யப்படும் என அரசு தெரிவித்துள்ளது. அணி வகுப்பின்போது குடியரசுத் தலைவர் பயன்படுத்தத் தயாராகவிருந்த விலையுயர்ந்த லிமோசைன் கார் கிடையாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் உலகில் 2வது பெரிய குடியரசுத் தலைவர் மாளிகையில் எந்தவித கட்டுமான பணிகளும் அடுத்த ஒரு ஆண்டிற்கு நடத்தப்படாது என்பது தெரியவந்துள்ளது.

லாக்டவுன் 4.0 எப்படி இருக்கும்? இந்த கட்டுப்பாடுகள் எல்லாம் படிப்படியாக தளர்த்தப்படுகிறதாம்!

வரும் நாட்களில் குடியரசுத் தலைவர் மாளிகையில் மாநில அளவில் செலவழிக்கப்படும் அரசு விருந்துகளுக்கான மதிப்பீடு தொகையே ஒதுக்கப்படும். இந்த ஆண்டு நடத்தப்படும் குடியரசு தின அணிவகுப்பின்போது குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் கடந்த ஆண்டு பெற்ற மெர்சிடஸ் பென்ஜ் எஸ் 600ஐ பயன்படுத்துவார் எனத் தெரிகிறது.

நாட்டில் கோடிக் கணக்கான மக்கள் பொருளாதார ரீதியாகச் சிரமப்பட்டும் உணவு கிடைக்காமலும் தவித்த வரும் நிலையில் அரசு இந்த முடிவுகளை எடுத்துள்ளது ஒருதரப்பினர் மத்தியில் வரவேற்கப்படுகிறது.

அடுத்த செய்தி