ஆப்நகரம்

புதுச்சேரியில் பாமகவினர் மீது தடியடி!

புதுச்சேரியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் முன்பு சாலை மறியலில் ஈடுபட்ட பாமகவினர் மீது தடியடி நடத்தப்பட்டது.

Samayam Tamil 24 Aug 2020, 2:19 pm
புதுச்சேரி பாமக இளைஞரணிச் செயலாளராக பதவி வகிப்பவர் ரமேஷ். இவர் கடந்த சில மாதங்களுக்கு முன் ஒரு நிறுவனத்தில் ஏசி ஒன்றை தவணைக்கு வாங்கியுள்ளார். ஒவ்வொரு மாதமும் சரியாக தவணை செலுத்தி வந்ததாக கூறப்படுகிறது.
Samayam Tamil those involved in a road blockade in front of the dsp office in puducherry were beaten
புதுச்சேரியில் பாமகவினர் மீது தடியடி!


ஆனால் திடீரென 5000 ரூபாய் அவரது கணக்கிலிருந்து எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து அந்த நிறுவனத்தினர் சரியான பதிலளிக்கவில்லை. இதனால் ரெட்டியார்பாளையம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கச் சென்றுள்ளார். ஆனால் அவரது புகாரை அவர்கள் வாங்க மறுத்துள்ளனர்.

இதைத் தொடர்ந்து தனது கட்சிக்காரர்கள் 40 பேரை திரட்டி மேட்டுப்பாளையத்தில் உள்ள மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்துக்கு புகார் அளிக்க இன்று சென்றுள்ளார். அங்கும் அவரது புகாரை ஏற்றுக்கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது.

தமிழ்நாட்டில் இ பாஸ் ரத்து: அமைச்சர் சொல்வது இதுதான்!

இதனால் ரமேஷ் தனது ஆதரவாளர்களுடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் முன்னர் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளார். கொரோனா பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் சாலை மறியல் உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபடக்கூடாது என காவல் துறையினர் எச்சரிக்கைவிடுத்தனர்.

இரண்டு பேர் வந்து மனு அளிக்க கூறியும் கூட்டம் கலையாததால் காவல் துறையினர் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது தடியடி நடத்தினர்.

அடுத்த செய்தி