ஆப்நகரம்

தலீபான்களை உருவாக்கும் ஆர்எஸ்எஸ் உடன் பாஜக உள்ளது: மம்தா பானர்ஜி

தலீபான்களை உருவாக்கும் ஆர்எஸ்எஸ் உடன் பாஜக இருப்பதாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கடுமையாக விமர்சித்துள்ளார்

Samayam Tamil 21 Jul 2018, 4:29 pm
தலீபான்களை உருவாக்கும் ஆர்எஸ்எஸ் உடன் பாஜக இருப்பதாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கடுமையாக விமர்சித்துள்ளார்
Samayam Tamil mamata ban


கடந்த 1993ம் ஆண்டு மேற்கு வங்காளத்தில் போலீசாரால் 13 இளைஞரணி உறுப்பினர்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர். அவர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 21ம் தேதி திரிணாமுல் கட்சி சார்பில் பேரணி நடத்தப்படுகிறது. அதன்படி இன்று கொல்கத்தாவில் மெகா பேரணி நடைபெற்றது. இதில் மேற்கு வங்க முதல்வரும் அக்கட்சியின் தலைவருமான மம்தா பானர்ஜி கலந்து கொண்டு மோடி தலைமையிலான மத்திய அரசை கடுமையாக விமர்சித்தார்.

அப்போது அவர் பேசியதாவது: ஆர்எஸ்எஸ் இயக்கத்தில் சில நல்ல மனிதர்கள் இருக்கிறார்கள். அவர்களை நான் மதிக்கிறேன். ஆனால், அங்குள்ள பல பேர் தலிபான் இயக்கத்தை போன்று செயல்பட்டு வருகிறார்கள். பாஜகவும் அவர்களுடன் கைகோர்த்துக் கொண்டு நாட்டை ஆண்டு வருகிறது. குடிசை வீடு கூட கட்ட முடியாதவர்கள் தேசத்தை உருவாக்கப்போகிறார்கள். வரும் ஆகஸ்ட் 15ம் தேதி சுதந்திர தினம் கொண்டாடப்பட உள்ளது. அன்றைய தினத்தில் திரிணாமுல் காங்கிரஸ் சார்பில் ‘பாஜகவை வெளியேற்றி தேசத்தை பாதுகாப்போம்’ என்ற பேரணி நடத்த உள்ளோம்.’

இவ்வாறு மம்தா பேசினார்.

அடுத்த செய்தி