ஆப்நகரம்

ஆயிரக்கணக்கில் ஐபோன்கள் திருட்டு; ஊழியர்கள் வன்முறையில் பல நூறு கோடி நஷ்டம்!

சம்பள பிரச்சினை தொடர்பாக ஊழியர்கள் வன்முறையில் ஈடுபட்ட சம்பவத்தில் ஏராளமான ஐபோன்கள் மாயமாகி இருக்கின்றன.

Samayam Tamil 14 Dec 2020, 12:22 pm
கர்நாடக மாநிலம் கோலாரில் உள்ள விஸ்ட்ரான் நிறுவனத்தில் ஐபோன் அசெம்பிள் செய்யும் வேலைகள் நடைபெற்று வருகின்றன. இங்கு பணியாற்றும் ஊழியர்களுக்கு உரிய சம்பளம் வழங்கப்படவில்லை என்று குற்றம்சாட்டப்படுகிறது. பொறியியல் படித்த மற்றும் வேறு பட்டப்படிப்பு படித்த இளைஞர்களை வேலைக்கு அமர்த்தி, அவர்களுக்கு நிர்ணயம் செய்த சம்பளத்தை வழங்காமல் குறைத்து வழங்கி வந்துள்ளனர். இதேநிலை தொடர்ந்ததால் கோபமடைந்த ஊழியர்கள், விஸ்ட்ரான் நிறுவனம் முழுவதையும் அடித்து நொறுக்கியுள்ளனர். அங்கிருந்த வாகனங்களை தீவைத்து கொளுத்தி இருக்கின்றனர்.
Samayam Tamil iPhones Theft in Bangalore


கண்ணாடி கதவுகள், ஜன்னல்கள், அதிகாரிகள், மேலாளர்கள் அறைகள் உள்ளிட்டவை அடுத்து தூள் தூளாக நொறுக்கியுள்ளனர். இதுதொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில் மற்றொரு அதிர்ச்சியூட்டும் விஷயம் தெரியவந்துள்ளது.

அரசு பேருந்துகள் ஓடவில்லை; பெரும் சிரமத்தில் மக்கள் - என்ன செய்யப் போகிறது அரசு?

அதாவது விஸ்ட்ரான் நிறுவனத்தில் இருந்த ஆயிரக்கணக்கான ஐபோன்கள் மாயமாகி இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. இதன்மூலம் அந்த நிறுவனத்திற்கு 437 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டிருப்பதாக கூறியுள்ளனர்.

இதுதொடர்பாக பேசிய கர்நாடக தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சிவராம் ஹெப்பர், விஸ்ட்ரான் நிறுவனத்தில் நடந்த நிகழ்வை ஒருபோதும் ஏற்க முடியாது. இந்நிறுவனத்திற்கும், ஒப்பந்த ஊழியர்களுக்கும் இடையிலான பிரச்சினை கடந்த மூன்று மாதங்களாக நடைபெற்று வந்துள்ளது.

2020ல் ட்விட்டரில் மாஸ்டர், விஜய், கீர்த்தி சுரேஷ் சாதனை

கோலார் யூனிட்டிற்காக 5 துணை நிறுவனங்களின் மூலம் 8,900 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். அதேசமயம் 1,200 நிரந்தர ஊழியர்கள் வேலை செய்து வருகின்றனர். சமீபத்தில் நடந்த கலவரத்திற்கு முறையான தகவல்தொடர்பு இன்மையே காரணம் என்று கருதுவதாக தெரிவித்தார்.

அடுத்த செய்தி