ஆப்நகரம்

Ernakulam: அல் கொய்தா தொடர்புடைய மூவர் எர்ணாகுளத்தில் கைது

இதே கும்பலோடு தொடர்புடைய ​மேலும் 6 பேர் மேற்கு வங்கத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Samayam Tamil 19 Sep 2020, 11:13 am
Samayam Tamil al qaeda
தீவிரவாதச் செயல்களை தடுக்கவும், தீவிரவாதத்தைக் கட்டுப்படுத்தவும் நாடு முழுக்க என்.ஐ.ஏ. பிரிவினர் திவிரமாக செயலாற்றி வருகின்றனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலிருந்து ஐஎஸ் ஐ எஸ் தீவிரவாத அமைப்போடு தொடர்புடைய நபர்களைத் தொடர்ச்சியாக கைது செய்து வந்தனர்.

இந்நிலையில், அல் கொய்தா தீவிரவாத அமைப்போடு தொடர்புடைய முன்று பேர் கேரளமாநிலம் எர்னாகுளத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். மேற்கு வங்கத்தில் இருந்து வந்த இவர்களை இன்று காலை என்.ஐ.ஏ. கைது செய்துள்ளது.

இதே கும்பலோடு தொடர்புடைய மேலும் 6 பேர் மேற்கு வங்கத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பாக என்.ஐ.ஏ. அதிகாரிகள் கூறும்போது, “தீவிரவாதிகளைக் கைது செய்வதில் என்.ஐ.ஏ மும்முரமாக செயல்பட்டு வருகிறது. அது ஒன்றே தற்போதைய ஒரே வேலையாக வைத்துள்ளோம்” என்று தெரிவித்தனர்.

அடுத்த செய்தி