ஆப்நகரம்

காஷ்மீர் எல்லையில் ஊடுருவல்: 3 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை

காஷ்மீர் மாநில எல்லையில் பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 3 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.

TNN 11 Sep 2016, 10:52 am
ஹந்தவாரா: காஷ்மீர் மாநில எல்லையில் பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 3 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.
Samayam Tamil three foreign terrorists killed in nowgam handwara
காஷ்மீர் எல்லையில் ஊடுருவல்: 3 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை


ஜம்மு காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் பகுதியில் இன்று காலை தீவிரவாதிகள் ஊடுருவியுள்ளனர். இதுகுறித்து தகவலறிந்த பாதுகாப்பு படையினர், சம்பவ இடத்திற்கு விரைந்தனர். அல்லாஹ் பிர் பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் துணை தலைமைச் செயலகத்திற்குள் தீவிரவாதிகள் பதுங்கினர்.
J&K: Police personnel killed in an ongoing encounter b/w security forces & terrorists in Poonch (Visuals deferred) pic.twitter.com/VcydiYv9dT— ANI (@ANI_news) September 11, 2016
இதையடுத்து அப்பகுதியை பாதுகாப்பு படையினர் சுற்றி வளைத்தனர். இருதரப்பினருக்கும் இடையே கடும் துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது. இதில் பாதுகாப்பு படை வீரர் ஒருவர் கொல்லப்பட்டனர். இதேபோல் ஹந்த்வாரா அடுத்த நவ்காம் பகுதியில் தீவிரவாதிகள் ஊடுருவியுள்ளனர். விரைந்து சென்ற பாதுகாப்பு படையினர் அப்பகுதியை சுற்றி வளைத்தனர்.
FLASH: Three foreign terrorists killed in Nowgam, Handwara (J&K). Four weapons have been recovered from them. Search operation continues.— ANI (@ANI_news) September 11, 2016
தீவிரவாதிகளுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் இடையே நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் மூன்று வெளிநாட்டு தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். அவர்களிடமிருந்து ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. தொடர்ந்து அப்பகுதியில் பாதுகாப்பு படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். மேலும் பூஞ்ச் பகுதியில் தீவிரவாதிகளுக்கு எதிராக துப்பாக்கிச்சூடு நடைபெற்று வருகிறது.

அடுத்த செய்தி