ஆப்நகரம்

கொரோனா: புதிதாக 386 பேர் பாதிப்பு; குணமடைந்தோர் 132 பேர் - இந்தியாவின் தற்போதைய நிலவரம் இதுதான்!!

இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,600 ஐ தாண்டியுள்ளது.

Samayam Tamil 1 Apr 2020, 5:49 pm
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் புதிதாக 386 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
Samayam Tamil corona india update


இதையடுத்து, இந்த வைரஸ் தொற்றுக்கு ஆளானவர்களின் எண்ணிக்கை 1,637 ஆக அதிகரித்துள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்திய அளவில் செவ்வாய்க்கிழமை மாலை நிலவரப்படி கொரோனா தொற்று கண்டறியப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,351 ஆக இருந்தது.

விஸ்வரூபம் எடுக்கும் டெல்லி மாநாடு; குஜராத்தில் இத்தனை பேருக்கு வைரஸ் தொற்று இருக்க வாய்ப்பு!

இந்த நிலையில் நேற்று (மார்ச் 31) மாலை 4:30 மணி தொடங்கி, இன்று (ஏப்.1) மாலை 4: 30 மணிவரையிலான கடந்த 24 மணி நேரத்தில் தேசிய அளவில் புதிதாக 386 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் தமிழகத்தில் இந்த தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ள மேலும் 50 பேரும் அடங்குவர்.

கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டோர் எண்ணிக்கை ஒரே நாளில் இப்படி அதிரடியாக உயர்ந்துள்ளதற்கு, டெல்லி நிஜாமுதீனில் அண்மையில் நடைபெற்ற மதரீதியான மாநாட்டில் பங்கேற்றவர்கள், நாட்டின் பல்வேறு மாநிலங்களுக்கும் பயணம் மேற்கொண்டுள்ளது ஒரு முக்கிய காரணம் என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

டெல்லியில் அண்மையில் நடைபெற்ற மதரீதியான மாநாட்டில் பங்கேற்றவர்களில் மொத்தம் 1,800 பேர் இதுவரை கண்டறியப்பட்டுள்ளனர்.

இவர்கள் அனைவரும் நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள ஒன்பது மருத்துவமனைகளில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர் என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சகத்தின் இணைச் செயலாளர் அகர்வால் தெரிவித்துள்ளார்.

Corona in India: 3ஆம் நிலையில் இந்தியா?

கொரோனா தொற்றால் இந்தியாவில் இதுவரை 38 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 132 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் என்பது சற்று ஆறுதல் அளிக்கும் தகவலாக உள்ளது.

அடுத்த செய்தி