ஆப்நகரம்

கடப்பா அருகே சாலை விபத்து: 3 பேர் பலி

ஆந்திர மாநிலம் கடப்பா அருகே பயணிகள் பேருந்தும் லாரியும் நேரெதிரே மோதிக் கொண்ட விபத்தில் 3 பேர் பலியாகினர்.

PTI 2 Apr 2016, 11:36 am
கடப்பா: ஆந்திர மாநிலம் கடப்பா அருகே பயணிகள் பேருந்தும் லாரியும் நேரெதிரே மோதிக் கொண்ட விபத்தில் 3 பேர் பலியாகினர்.
Samayam Tamil three killed 30 hurt in bus truck collision
கடப்பா அருகே சாலை விபத்து: 3 பேர் பலி


திருப்பதியில் இருந்து பயணிகளை ஏற்றி வந்த பேருந்து ரயில்வே கொடூர் நோக்கி சென்றுக் கொண்டிருக்கையில் இவ்விபத்து நேர்ந்ததாக கூறப்படுகிறது.

ரயில்வே கொடூர் சர்கிள் இன்ஸ்பெக்டர் ரசூல் கூறுகையில், பேருந்து நடத்துனர் பிரபாகர் (42), பயணி எம்.சுதீர் (30), ஆகியோர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். மேலும் ஒரு பயணி கே.சுப்பரயுடு(75) மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார்.

விபத்தில் காயமடைந்தவர்கள் அருகில் உள்ள கொடூர் மற்றும் திருப்பதி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதற்கிடையே பேருந்தில் சிக்கிக் கொண்டு தவித்த ஓட்டுனர் நாராயணாவை போலீசார் பத்திரமாக மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததாக தகவல் தெரிவித்துள்ளனர்.

அடுத்த செய்தி