ஆப்நகரம்

லாரி மீது கார் மோதி விபத்து : மூன்று பேர் 'ஸ்பாட் அவுட்'

கார் -லாரி மோதிய விபத்தில் மூன்று பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.

Samayam Tamil 21 May 2020, 9:27 pm
திருப்பதி: தெலங்கானா மாநிலம், நல்கொண்டா மாவட்டம், சிட்டியால கிராமம் அருகே உள்ள தேசிய நெடுஞ்சாலையில் சாலை ஓரமாக நிறுத்தப்பட்டிருந்த லாரி மீது கார் மோதிய விபத்தில் 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் இரண்டு பேர் படுகாயமடைந்தனர்.
Samayam Tamil accident


தெலங்கானா மாநிலம்,, மேற்கு கோதாவரி மாவட்டம், ராஜமுந்திரி நகருக்கு அருகிலுள்ள கொத்தப்பள்ளியை சேர்ந்த ஒரு குடும்பத்தினர் இன்று காலை காரில் ஹைதராபாத்துக்கு சென்று கொண்டிருந்தனர்.

நல்கொண்டா மாவட்டம், சிட்டியால கிராமம் அருகே கார் சென்று கொண்டிருந்தது. அப்போது அந்தப் பகுதியில், தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஒரு பெட்ரோல் பங்க் அருகில் சாலை ஓரமாக நிறுத்தப்பட்டிருந்த லாரி மீது கார் வேகமாக மோதியது. இதில் காரில் இருந்த 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இரண்டு பேர் படுகாயமடைந்தனர்.

சிக்கிய திருடர்கள்; சிக்கிக் கொண்ட போலீசார் - கொரோனா செஞ்ச வேலையை பாருங்க!

தகவலறிந்த கோகவரம் மண்டல காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்து விரைந்தனர். விபத்தில் இறந்த சடலங்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ராஜமுந்திரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

காயமடைந்தவர்கள் ராஜமுந்திரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த விபத்து குறித்து, போலீஸார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அடுத்த செய்தி