ஆப்நகரம்

ஜெய்ப்பூர் சாலை விபத்தில் 3 பேர் பலி

ஜெய்ப்பூர் டோன்க் நெடுஞ்சாலையில் சென்றுக்கொண்டிருந்த கார் தலைகீழாக கவிழ்ந்ததில் 3 பேர் பலியாகினர், 2 பேர் படுகாயம் அடைந்தனர்.

PTI 25 Feb 2016, 5:46 pm
ஜெய்ப்பூர்: ஜெய்ப்பூர் டோன்க் நெடுஞ்சாலையில் சென்றுக்கொண்டிருந்த கார் தலைகீழாக கவிழ்ந்ததில் 3 பேர் பலியாகினர், 2 பேர் படுகாயம் அடைந்தனர்.
Samayam Tamil three killed two injured in mishap
ஜெய்ப்பூர் சாலை விபத்தில் 3 பேர் பலி


டோன்க் எனும் இடத்தில் திருமண விழாவை முடித்துவிட்டு நேற்று இரவு ஜெய்ப்பூர் திரும்பிக் கொண்டிருந்த கர் விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சிவதாசபுராவில் உள்ள ஷிட்லா கோவில் அருகே விபத்து நடந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

காரில் பயணம் செய்த பிரதீக் குப்தா(25), ஸ்ம்ரிதி குப்தா(23), ப்ரஷாளி வர்மா(18), ஆகியோர் சம்பவ இடத்திலேயே பலியானதாக போலீசார் தெரிவித்துள்ளனர். படுகாயம் அடைந்தவர்களின் நிலை கவலைக்கிடமாகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி