ஆப்நகரம்

காவலரை கடத்திக் கொன்ற தீவிரவாதிகள் 3 பேர் சுட்டுக் கொலை!

ஜம்மு காஷ்மீரில் காவலரைக் கடத்திக் கொலை செய்த மூன்று தீவிரவாதிகளை, பாதுகாப்புப் படையினர் சுட்டுக் கொன்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Samayam Tamil 22 Jul 2018, 10:46 am
ஜம்மு காஷ்மீரில் காவலரைக் கடத்திக் கொலை செய்த மூன்று தீவிரவாதிகளை, பாதுகாப்புப் படையினர் சுட்டுக் கொன்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
Samayam Tamil jk
காவலரை கடத்திக் கொன்ற தீவிரவாதிகள் 3 பேர் சுட்டுக் கொலை!


ஜம்மு காஷ்மீர் மாநிலம் அருகே கத்துவாவில் காவலர் பயிற்சிக்காக சென்றிருந்த முகமது சலீம் என்பவர், விடுமுறைக்காக குல்காமில் உள்ள தனது வீட்டுக்குச் சென்றுள்ளார். வீட்டில் இருந்த போது தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட சலீமின் உடல் குண்டு துளைத்த நிலையில் வயல்வெளியில் மீட்கப்பட்டது.

இந்நிலையில், காவலரை கடத்திக் கொன்ற தீவிரவாதிகளை தேடுவதற்காக, காஷ்மீர் போலீசார், ராணுவம் மற்றும் சி.ஆர்.பி.எப் படைகளின் வீரர்கள் குல்காம் பகுதியில் சிறப்பு தேடுதல் வேட்டையை நடத்தினர். இந்த தேடுதலில் பயங்கரவாதிகள் பதுங்கியிருந்த இடத்தை சுற்றி வளைத்த வீரர்கள், அவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினர்.


சில மணி நேர சண்டைக்கு பிறகு 3 பயங்கரவாதிகளும் சுட்டுக் கொல்லப்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இந்தநிலையில் மோதலின் போது சுட்டுக்கொல்லப்பட்ட மூன்று தீவிரவாதிகளும் காவலர் சலீமைக் கடத்திக் கொன்ற குழுவைச் சேர்ந்தவர்கள் என ஜம்மு காஷ்மீர் காவல்துறை டிஜிபி எஸ்.பி.வைத் தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

அடுத்த செய்தி