ஆப்நகரம்

இருவேறு தாக்குதல்கள்: தீவிரவாதிகள் 5 பேர் சுட்டுக் கொலை

ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில் நடைபெற்ற இருவேறு தீவிரவாத தாக்குதல்களில் தீவிரவாதிகள் 5 பேர் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளனர்.

TNN 29 Nov 2016, 8:01 pm
ஜம்மு: ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில் நடைபெற்ற இருவேறு தீவிரவாத தாக்குதல்களில் தீவிரவாதிகள் 5 பேர் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளனர்.
Samayam Tamil three soldiers five militants killed in two jammu attacks
இருவேறு தாக்குதல்கள்: தீவிரவாதிகள் 5 பேர் சுட்டுக் கொலை


ஜம்முவின் புறநகர் பகுதியான நக்ரோட்டாவில் உள்ள ராணுவ முகாம் மீது ஆயுதம் தாங்கிய தீவிரவாதிகள் திடீரென தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் ராணுவ வீரர்கள் மூன்று பேர் வீர மரணமடைந்தனர். இந்த தாக்குதலுக்கு தக்க பதிலடி கொடுத்த ராணுவ வீரர்களின் அதிரடியில் தீவிரவாதிகள் இரண்டு பேர் சுட்டு வீழ்த்தப்பட்டனர்.

அதேபோல், சம்பா பகுதியில் உள்ள பாகிஸ்தான் எல்லை அருகே திடீரென தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். தொடர்ந்து, வீரர்கள் கொடுத்த பதிலடியில் தாக்குதல் நடத்திய தீவிரவாதிகள் மூன்று பேரும் சுட்டு வீழ்த்தப்பட்டனர்.

உரி தாக்குதலை தொடர்ந்து, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இந்திய ராணுவத்தினர் துல்லியத் தாக்குதல் நடத்தினர். இதனையடுத்து, இந்தியா - பாகிஸ்தான் இடையே அசாதாரண சூழல் நிலவி வருகிறது என்பதும், எல்லைப் பகுதியில் அடுத்தடுத்து தீவிரவாத தாக்குதல்கள் நடைபெற்று வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
Three soldiers, five militants killed in two Jammu attacks

அடுத்த செய்தி