ஆப்நகரம்

நொடிப் பொழுதில் சரிந்து தரைமட்டமான கட்டடம்; பெங்களூரில் அதிர்ச்சி - வைரல் வீடியோ!

கபாலி தியேட்டர் இருந்த இடத்தில் கட்டுமான நிலையில் இருந்த கட்டடம் சரிந்து தரைமட்டமான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Samayam Tamil 29 Jul 2020, 7:09 am
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள மெஜஸ்டிக் பகுதியில் கபாலி தியேட்டர் என்ற பழமையான தியேட்டர் இருந்தது. சமீபத்தில் அதனை இடித்துவிட்டு ஓட்டல் ஒன்று கட்ட தீர்மானிக்கப்பட்டது. இதற்கான கட்டுமான வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. மூன்று மாடிகள் கொண்ட கட்டடம் எழும்பிய நிலையில் நேற்று இரவு 10.15 மணியளவில் திடீரென இடிந்து தரைமட்டமானது. இதுதொடர்பாக மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், 80 அடி ஆழம் வரை பூமியில் குழி தோண்டி புதிய கட்டடம் எழுப்பியுள்ளனர்.
Samayam Tamil Bangalore Building Collapse


இந்த சூழலில் கடந்த திங்கட்கிழமை இரவு அருகிலுள்ள கட்டடங்களில் திடீரென விரிசல் ஏற்பட்டுள்ளது. இதனையறிந்த கட்டுமான வேலையில் இருந்த அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் வெளியேறிவிட்டனர். கட்டுமான வேலைகள் சரியில்லை என்பதை உணர்ந்து, முற்றிலும் இடித்துவிட உரிமையாளர் திட்டமிட்டுள்ளார். இதற்காக பெங்களூரு மாநகராட்சியிடம் அடுத்த மாதம் இடிப்பதற்கு அனுமதி கோரியுள்ளனர். இந்த சூழலில் தான் கட்டடம் தாமாக இடிந்து விழுந்துள்ளது.

ஒருபக்கம் மழை, மறுபக்கம் வனவிலங்குகள், நடுவே ஆன்லைன் கிளாஸ் - பதற்றத்தில் மாணவர்கள்!

இந்த விபத்தின் போது கட்டடத்தில் யாரும் இல்லை. இருப்பினும் சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் மற்றும் தீயணைப்புத்துறையினர் யாரேனும் சிக்கி இருக்கிறார்களா என்று தேடும் பணியில் ஈடுபட்டனர். இதுதொடர்பாக காந்திநகர் எம்.எல்.ஏ தினேஷ் குண்டு ராவ் கூறுகையில், அருகிலுள்ள கட்டடங்களில் சேதம் ஏற்பட்டுள்ளது. இதற்கு இடிந்து விழுந்த கட்டடத்தின் உரிமையாளர் தான் பொறுப்பு. அவர் தான் இழப்பீடு தர வேண்டும்.

இந்த கட்டடத்தின் பிளான் மற்றும் அனுமதி குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார். மேலும் விஸ்வேஸ்வரய்யா பொறியியல் பல்கலைக்கழக முதல்வர் ஹெச்.என் ரமேஷ் கூறுகையில், புதிய கட்டடம் கட்டுவதற்காக 80 அடி ஆழம் வரை சென்றுள்ளனர். இதனால் அருகிலுள்ள கட்டடங்களிலும் விரிசல் ஏற்பட்டுள்ளது. அதிலிருந்தவர்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டு விட்டனர். புதிய கட்டடம் கட்ட ஜியோடெக்னாலஜி ஆலோசகரிடம் உரிய ஆலோசனை பெறவில்லை என்று தெரிகிறது.

ஒரே மீன், ஓஹோன்னு வாழ்க்கை - லட்ச லட்சமாய் பணத்தை அள்ளிய மீனவர்கள்!

இந்த சம்பவம் பொதுமக்களுக்கு ஒரு விழிப்புணர்வாக இருக்கட்டும். கட்டுமான வேலைகளுக்கு முன்பாக மண்ணின் தரம் மற்றும் ஜியோடெக்னாலஜி ஆலோசகரின் ஆலோசனை அவசியம் என்பதை நினைவில் கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

அடுத்த செய்தி