ஆப்நகரம்

திருப்பதி ஏழுமலையான் பக்தர்களுக்கு இன்னொரு ஹேப்பி நியூஸ்!!

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நாளை முதல் (ஜூன் 20) கூடுதலாக 3,000 பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவார்கள் என்று தேவஸ்தான நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Samayam Tamil 19 Jun 2020, 7:57 pm
கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக, திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கடந்த மார்ச் மாதம் 16 ஆம் தேதி முதல் பக்தர்கள் தரிசனத்துக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது.
Samayam Tamil tirumala


இந்த நிலையில், பொதுமுடக்க விதிமுறைகள் தளர்த்தப்பட்டதையடுத்து, கிட்டத்தட்ட 3 மாதங்களுக்கு பிறகு, கடந்த 11 ஆம் தேதி முதல் இங்கு பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

300 ரூபாய் கட்டண தரிசன வரிசையில் 3,000 பக்தர்கள், இலவச தரிசன வரிசையில் 3,000 பக்தர்கள், விஐபி தரிசன பிரிவில் 750 பேர் என்று நாள்தோறும் மொத்தம் 6,750 பேர் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுகின்றனர்.

Solar Eclipse: இந்த சூரிய கிரகணத்தை விட அடுத்த கிரகணம் உக்கிரமாக இருக்கும்...

இதன் தொடர்ச்சியாக, நாளை முதல் (ஜூன் 20), 300 ரூபாய் கட்டண தரிசன பிரிவில் கூடுதலாக 3,000 பக்தர்களை தரிசனத்துக்கு அனுமதிக்க தேவஸ்தான நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இதற்கான டிக்கெட்களை பக்தர்கள் ஆன்-லைனில் பெற வேண்டும் என்றும் தேவஸ்தான நிர்வாகம் தெரிவித்துள்ளது.

அடுத்த செய்தி