திருச்சூர் : சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட முதியவருக்கு 30 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து திருச்சூர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. 2015-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் வேலப்பன் என்பவர், அவரது வீட்டிற்கு அருகே வசிக்கும் 13 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். மறுநாள் பள்ளிக்கு சென்ற சிறுமி ஆசிரியர்களிடம் நடந்தவற்றை கூற, அருகில் உள்ள அரசு காப்பகத்தில் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டார். பரிசோதனைக்கு பின்னர் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளார் என்பது உறுதியானது.
பின்னர் ஆசிரியர்களும், காப்பக மருத்துவர்களும் கொடுத்த புகாரின் அடிப்படையில் வேலப்பன் கைது செய்யப்பட்டார். இது தொடர்பான விசாரணை திருச்சூர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்நது. இந்நிலையில் குற்றம் சாட்டப்பட்ட முதியவர் வேலப்பனுக்கு 30 ஆண்டுகள் சிறை தண்டனையும், இரண்டு லட்ச ரூபாய் அபராதமும் விதித்து திருச்சூர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
பின்னர் ஆசிரியர்களும், காப்பக மருத்துவர்களும் கொடுத்த புகாரின் அடிப்படையில் வேலப்பன் கைது செய்யப்பட்டார். இது தொடர்பான விசாரணை திருச்சூர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்நது. இந்நிலையில் குற்றம் சாட்டப்பட்ட முதியவர் வேலப்பனுக்கு 30 ஆண்டுகள் சிறை தண்டனையும், இரண்டு லட்ச ரூபாய் அபராதமும் விதித்து திருச்சூர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.