ஆப்நகரம்

உரிமையாளரை தாக்கிய ஒட்டகம்: வெயிலில் கட்டி போட்டதால் ஆத்திரம்

சுட்டெரிக்கும் வெயிலில் நாள்முழுவதும் காலை கட்டிப்போட்டு வைத்திருந்ததால் ஆத்திரம் அடைந்த ஒட்டகம், உரிமையாளரை தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

TNN 23 May 2016, 12:47 pm
ஜெய்சால்மர்: சுட்டெரிக்கும் வெயிலில் நாள்முழுவதும் காலை கட்டிப்போட்டு வைத்திருந்ததால் ஆத்திரம் அடைந்த ஒட்டகம், உரிமையாளரை தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Samayam Tamil tied in heat all day angry camel severs owners head
உரிமையாளரை தாக்கிய ஒட்டகம்: வெயிலில் கட்டி போட்டதால் ஆத்திரம்


மாங்தா கிராமத்தில் உள்ள உர்ஜாராம், வீட்டில் கூடியிருந்த உறவினர்களை கவனித்துக் கொண்டிருகையில், காலை முதல் தனது ஒட்டகம் வெயிலில் கால் கட்டி நின்றுக் கொண்டிருந்தது நினைவுக்கு வந்துள்ளது. கடும் கோவத்தில் இருந்த ஒட்டகம் உர்ஜாராம் அருகில் சென்றதும் அவரை கடுமையாக தாக்கியுள்ளது. சுமார் 25க்கும் மேற்பட்ட கிராம மக்கள் கூடி ஆத்திரத்தில் இருந்த ஒட்டகத்தை சமாதானப்படுத்தியதாக தெரிவித்துள்ளனர்.

ஆத்திரத்தை வெளிப்படுத்திய ஒட்டகம், உர்ஜாராமின் கழுத்தை பிடித்து தூக்கி எரிந்ததில், அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டதாக சம்பவத்தை நேரில் பார்த்த நபர் தெரிவித்துள்ளார். இதேபோன்று ஏற்கனவே உர்ஜாராமை அவரது ஒட்டகம் தாக்கியுள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

நாட்டில் ராஜஸ்தான் மாநிலத்தில் தான் அதிகபட்ச வெப்பம் பதிவாகியுள்ளது. இதனால் பாகிஸ்தான் எல்லைப்பகுதியின் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ள ராணுவ வீரர்களும், இந்த கடும் வெயிலில் ஒட்டகங்களை சமாளிப்பது கடினமான ஒன்றாக இருப்பதாக தெரிவித்துள்ளனர்.

அடுத்த செய்தி