ஆப்நகரம்

யார் அந்த ஹேங்மேன்?- நிர்பயா வழக்கில் குற்றவாளிகளை தூக்கிலிட தயாரான நபர்!

நிர்பயா பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றவாளிகளுக்கு அளிக்கப்பட்ட தூக்கு தண்டனையை நிறைவேற்ற ஹேங்மேனை திகார் சிறை நிர்வாகம் தேர்வு செய்துள்ளது.

Samayam Tamil 12 Jan 2020, 8:12 am
கடந்த 2012ஆம் ஆண்டு டெல்லியில் நிர்பயா என்ற பெண்ணை கொடூரமாக பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் குற்றவாளிகள் முகேஷ் சிங்(32), வினய் ஷர்மா(26), அக்‌ஷய் சிங்(31), பவன் குப்தா(25) ஆகியோர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
Samayam Tamil Hang


இவர்களை வரும் 22ஆம் தேதி காலை 7 மணிக்கு தூக்கில் போட டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதற்கான ஹேங்மேனை தேர்வு செய்யும் பணியில் திகார் சிறை நிர்வாகம் ஈடுபட்டு வந்தது. இந்த சூழலில் பவன் ஜாலத் என்ற நபர் தூக்கிலிடும் பணிக்காக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

பிரதமர் மோடியை சந்தித்த மம்தா..!

யார் இந்த பவன் ஜாலத்:

* இவர் உத்தரப்பிரதேச மாநிலத்தை சேர்ந்தவர். இவரது குடும்பமே தூக்கிலிடும் பணியை மேற்கொண்டு வந்துள்ளார்கள். தற்போது நான்காவது தலைமுறையாக பவன் ஜாலத் ஹேங்மேனாக பணியாற்றி வருகிறார். இவரது உடல் தகுதி, கண் பார்வை ஆகியவை சிறந்து விளங்குவதாக கூறப்படுகிறது.

எனவே நிர்பயா வழக்கு குற்றவாளிகளை தூக்கிலிட இவரே சிறந்த நபர் என்று திகார் சிறை நிர்வாகம் தேர்வு செய்துள்ளது. மிகுந்த அனுபவம் கொண்டுள்ளதால் தூக்கிலிடும் பணியில் எந்தவித தவறும் நேராது என்று கருதப்படுகிறது.

19 அடுக்கு மாடி, விலையோ பல கோடி... ஒரு செக்கண்டில் இடித்து தள்ளிய அதிகாரிகள்... வீடியோ

சமீபத்தில் திகார் சிறைக்கு பவன் அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு தூக்கு மேடை உள்ளிட்ட இடங்களை அவர் ஆய்வு செய்தார். இவர் தங்குவதற்கு சிறையில் தனி அறை ஒதுக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக பவன் ஜாலத் கூறுகையில், இந்த பணிக்காக கடந்த சில மாதங்களாகவே காத்துக் கொண்டிருக்கிறேன். இறுதியில் எனது வேண்டுதல் கடவுளுக்கு கேட்டுள்ளது என்று தெரிவித்தார். தற்போது பவன் ஜாலத் ரகசிய பாதுகாப்பில் இருப்பதாக கூறப்படுகிறது.

நிர்பயா வழக்குக் குற்றவாளிகள் தூக்கு விலக்கப்படுமா?

அடுத்த செய்தி