ஆப்நகரம்

டிக் டாக் வீடியோவால் நிகழ்ந்த விபரீதம்!

டிக் டாக் மோகத்தால் இளைஞர் நீரில் அடித்துச் செல்லப்பட்டு பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இரண்டு நாள்களுக்குப் பின் அவரது உடல் அழுகியநிலையில் மீட்கப்பட்டது.

Samayam Tamil 22 Sep 2019, 4:40 pm
டிக் டாக் செயலியை தடை செய்யக் கோரி தமிழகம் மட்டுமல்லாமல் இந்தியளவில் எதிர்ப்புக்குரல்கள் கேட்டுவருகின்றன. ஆபாசமான வீடியோக்களால் கலாச்சாரம் சீரழிகிறது என்று ஒருபக்கம் கூறப்பட்டாலும், டிக் டாக் மோகத்தால் லைக்ஸ் வாங்குவதற்காக யாராலும் செய்ய முடியாததை செய்கிறேன் என கண்மூடித்தனமான துணிச்சலால் உயிரிழப்புகள் வரை ஏற்படுகின்றன. தற்போது டிக் டாக் வீடியோவால் மற்றொரு உயிர் பலி தெலங்கானா மாநிலத்தில் ஏற்பட்டுள்ளது.
Samayam Tamil Untitled collage (9)


தெலங்கானா மாநிலம், நிஜாமாபாத் பீம்கல் மண்டலம் கோனூகொப்புலா கிராமத்து பகுதியைச் சேர்ந்தவர் தினேஷ் (22). இவர் அவருடைய நண்பர்களான கங்காஜலம் , மனோஜ் ஆகியோருடன் அருகிலுள்ள கப்பலவாகு தடுப்பணை பகுதிக்கு கடந்த வெள்ளிக்கிழமை மாலை சென்றார். தடுப்பணைப் பகுதியில் மீன் பிடித்துக் கொண்டும் குளித்துக்கொண்டிருந்த நண்பர்கள் டிக் டாக் செயலியில் வீடியோ பதிவு செய்தனர். அப்போது தடுப்பணையில் திடீரென ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் காரணமாக மூவரும் நீரில் அடித்துச் செல்லப்பட்டனர்.

இதைக் கவனித்த கரையோரத்தில் இருந்த கிராம மக்கள் போராடி கங்காஜலம், மனோஜ் ஆகியோரை மீட்டனர். தினேஷ் நீரில் அடித்துச் செல்லப்பட்டு மாயமானார். இதுகுறித்து தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த தேசிய பேரிடர் மீட்புப் படையினர் தினேஷை தேடும் பணியில் ஈடுபட்டனர். கடந்த இரண்டு நாட்களாக தினேஷை தேடி வந்த நிலையில் இன்று அவருடைய உடல் அழுகிய நிலையில் மீட்கப்பட்டது. அதைப் பார்த்த குடும்பத்தினரும், உறவினர்களும் அழுது புலம்பினர். இதைத்தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில் டிக் டாக் வீடியோ மோகத்தால் வாலிபர் தடுப்பணையில் அடித்துச் செல்லப்பட்டது இன்று தெரியவந்தது.

அடுத்த செய்தி