ஆப்நகரம்

அர்னாப்பிற்கு எதிராக டைம்ஸ் நவ் தொலைக்காட்சி கிரிமினல் வழக்கு..!

ரிபப்ளிக் செய்தித் தொலைக்காட்சி நிறுவனத்தின் தலைவரான அர்னாப் கோஸ்வாமிக்கு எதிராக, டைம்ஸ் நவ் தொலைக்காட்சி கிரிமினல் வழக்கு தொடர்ந்துள்ளது.

TNN 17 May 2017, 10:56 pm
ரிபப்ளிக் செய்தித் தொலைக்காட்சி நிறுவனத்தின் தலைவரான அர்னாப் கோஸ்வாமிக்கு எதிராக, டைம்ஸ் நவ் தொலைக்காட்சி கிரிமினல் வழக்கு தொடர்ந்துள்ளது.
Samayam Tamil times now files criminal case for stealing against arnab goswami of republic tv
அர்னாப்பிற்கு எதிராக டைம்ஸ் நவ் தொலைக்காட்சி கிரிமினல் வழக்கு..!


மும்பையிலுள்ள ஆசாத் மைதான் காவல் நிலையத்தில், பல்வேறு பிரிவுகளின் கீழ் அர்னாப் கோஸ்வாமிக்கு எதிராக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. திருட்டு, நம்பிக்கை திருட்டு,மோசடி மற்றும் பிசிசிஎல் நிறுவனத்தின் விதிமுறைகளை மீறியது ஆகிய குற்றச்சாட்டுகளை அர்னாப் மீது டைம்ஸ் நவ் தொலைக்காட்சி சுமத்தியுள்ளது.

டைம்ஸ் குழுமத்தைச் சேர்ந்த டைம்ஸ் நவ் தொலைக்காட்சியின் தலைமை செய்தி ஆசியராக பணியாற்றி வந்த அர்னாப் கோஸ்வாமி, அங்கிருந்து விலகி கடந்த மே 6-ஆம் தேதி ரிபப்ளிக் டிவி என்ற தொலைக்காட்சியை துவங்கினார். ஒளிபரப்பை துவங்கிய முதல் நாளில், தற்போது சிறை தண்டனை அனுபவித்து வரும் முன்னாள் எம்.பி சகாபுதீன் மற்றும் பீகார் முன்னாள் முதல்வர் லல்லு பிரசாத் யாதவ் ஆகியோருக்கு இடையிலான போன் உரையாடல் குறித்த ஆடியோ பதிவை ரிபப்ளிக் தொலைக்காட்சி வெளியிட்டது.

அதே போல மே 8-ஆம் தேதி, டைம்ஸ் நவ் தொலைக்காட்சியின் முன்னாள் நிருபர் ஸ்ரீதேவி (தற்போது ரிபப்ளிக் தொலைக்காட்சியில் பணியாற்றுகிறார்) , காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சசி தரூரின் மனைவியான மறைந்த சுனந்தா புஷ்கர் மற்றும் அவரின் வீட்டு வேலைக்காரர் ஆகியோருக்கு இடையே நடந்த உரையாடல் பதிவையும் அந்த தொலைக்காட்சி வெளியிட்டது.

ரிபப்ளிக் தொலைக்காட்சி ஒளிபரப்பிய இந்த ஆடியோ உரையாடல் பதிவுகள், அர்னாப் மற்றும் ஸ்ரீதேவி ஆகியோர் டைம்ஸ் நவ் தொலைக்காட்சியில் பணியாற்றிய போது பதிவு செய்யப்பட்டவை எனவும் டைம்ஸ் நவ் நிறுவனத்திற்கு சொந்தமான இந்த பதிவுகளை யாருடைய அனுமதியும் பெறாமல் அர்னாப் தன்னுடைய தொலைக்காட்சியில் பயன்படுத்தியுள்ளார் எனவும் டைம்ஸ் நவ் தொலைக்காட்சி தனது புகாரில் தெரிவித்துள்ளது.

எனவே காப்பிரைட் சட்டத்தின் கீழ் ஐ.பி.சி 403 மற்றும் மேலும் சில பிரிவுகளின் கீழ் அர்னாப் மற்றும் ஸ்ரீதேவி ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட வேண்டும் எனவும் அந்த புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


பிசிசிஎல் நிறுவனத்தின் கீழ் செயல்படும் டைம்ஸ் நியூஸ் நெட்வொர்க் நிறுவனம்,பல்வேறு தொலைக்காட்சி சேவைகளை அளித்து வருகிறது. மேலும் எகானமிக்ஸ் டைம்ஸ் நாளிதழையும் நடத்தி வருகிறது. தற்போது இந்தியாவின் முன்னணி ஆங்கில செய்தித் தொலைக்காட்சியாக விளங்கும் டைம்ஸ் நவ் , கடந்த 2006-ஆம் ஆண்டு ஜனவரி 31-ஆம் தேதி துவங்கப்பட்டது.

Times Now files criminal case for stealing against Arnab Goswami of Republic TV

அடுத்த செய்தி