ஆப்நகரம்

திருப்பதி ஏழுமலையான் பக்தர்களுக்கு இப்படி ஒரு ஷாக்!

திருப்பதி ஏழுமலையான் பக்தர்கள் தரிசனம் செய்வதில் சிக்கல் உருவாகியுள்ளது.

Samayam Tamil 12 Apr 2021, 9:40 am

ஹைலைட்ஸ்:

  • கொரோனா பாதிப்பால் வந்த சிக்கல்
  • இலவச தரிசன டிக்கெட் முறை ரத்து
  • பக்தர்களின் நலன் கருதி முடிவு!
ஹைலைட்ஸ் படிக்க - டவுண்லோட் ஆப்
Samayam Tamil tirumala tirupati
கடந்த ஆண்டு தொடக்கத்தில் உலகம் முழுவதும் பரவத் தொடங்கிய கொரோனா மக்களின் இயல்பு வாழ்க்கையை புரட்டிப் போட்டது. வழிபாட்டுத் தலங்கள் மூடப்பட்டன.
பாதிப்புகள் சற்று குறைந்த நிலையில் பொது முடக்கத்தில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. வழிபாட்டுத் தலங்கள் திறக்கப்பட்டதால் பக்தர்கள் உற்சாகமடைந்தனர். ஆனால் தற்போது இந்தியாவில் கொரோனா வைரஸின் இரண்டாவது அலை மிக வேகமாக அடித்து வருகிறது.

எடப்பாடிக்கு கிடைத்த ரிப்போர்ட்: முடிவு இப்படித் தான் இருக்குமாம்!

இந்தியாவில் இதுவரை இல்லாத அளவுக்கு பாதிப்பும், உயிரிழப்பும் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் மீண்டும் கட்டுப்பாடு அதிகரிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் இன்று முதல் இலவச தரிசன டோக்கன் முறை ரத்து செய்யப்பட்டுள்ளது.

வெளியான அந்த ரிப்போர்ட்: டென்ஷனில் நிர்வாகிகளை வறுத்தெடுத்த எடப்பாடி

இன்று மாலை 6 மணி வரை இலவச தரிசன டோக்கன் படி அனுமதிக்கப்படுவார்கள் என்றும் அதன்பின்னர் அனுமதி மறுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பக்தர்களின் நலன் கருதி இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி