ஆப்நகரம்

திருப்பதி பக்தர்களுக்கு ஹேப்பி நியூஸ்: ஒரு நாள் சுற்றுலா திட்டம்!

திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்ய ஐஆர்சிடிசி புதிய திட்டத்தை தொடங்கியுள்ளது.

Samayam Tamil 12 Feb 2021, 11:14 am
திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க வேண்டும் என்ற ஆவல் பக்தர்களுக்கு அதிகளவில் இருப்பதாலே மக்கள் நாடெங்கிலுமிருந்து திருப்பதிக்கு படையெடுக்கின்றனர்.
Samayam Tamil TIRUPATI TEMPLE


கொரோனா பரவல் காரணமாக குறிப்பிட்ட அளவிலான பக்தர்களே அனுமதிக்கப்படுகின்றனர். இந்நிலையில் மக்களின் பயணத்தை எளிமையாக்கி திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்ய வைக்க இந்திய ரயில்வே சுற்றுலாக உணவுக் கழகம் புதிய திட்டத்தை தொடங்கியுள்ளது.

‘டிவைன் பாலாஜி தரிசனம்’ என்ற இந்த திட்டத்தின் மூலம் நபர் ஒன்றுக்கு 990 ரூபாய் வசூலிக்கப்படுகிறது. அந்த வகையில் நாட்டில் எங்கிருந்தாலும் தங்கள் சொந்த செலவில் ரயில் மூலம் காலை 8 மணிக்கு திருப்பதி ரயில் நிலையத்துக்கு வந்துவிட்டால் அங்கிருந்து திருச்சானூர் பத்மாவதி தாயார் தரிசனம், ஏழுமலையான் தரிசனம் ஆகியவற்றை முடித்துக் கொண்டு மாலை அல்லது இரவு ரயில் மூலம் ஊர் திரும்பும் வகையில் ஐஆர்சிடிசி இந்த திட்டத்தை கொண்டு வந்துள்ளது.
திருப்பதியில் இப்படியொரு ஆச்சரியம்; வியக்க வைக்கும் பிரம்மாண்டம்!

ஆண்கள் வேட்டி, சட்டை, குர்தா, பைஜாமா ஆகியவற்றை அணியவேண்டும், பெண்கள் சேலை, சுடிதார் ஆகியவை அணிய வேண்டும். டி சர்ட், ஜீன்ஸ் ஆகியவை அனுமதிக்கப்படமாட்டாது.

ரயிலுக்கு முன்பதிவு செய்யும் போதும், டிவைன் பாலாஜி தரிசனத்துக்கு முன்பதிவு செய்யும் போதும் ஒரே அடையாள அட்டையை பயன்படுத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

அடுத்த செய்தி