ஆப்நகரம்

திருப்பதி பிரம்மோற்சவ விழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம்

பிரம்மோற்சவ விழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

TNN 12 Oct 2016, 11:43 pm
திருப்பதி: பிரம்மோற்சவ விழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
Samayam Tamil tirupati brahmotsavam festival celebrated with lakhs of people
திருப்பதி பிரம்மோற்சவ விழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம்


திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நடைபெற்ற பிரம்மோற்சவ விழா நேற்றுடன் நிறைவடைந்தது. இதில் 9 லட்சத்திற்கும் மேலான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். பக்தர்களின் காணிக்கை செலுத்தியதன் மூலம் ரூ.20 கோடியே 24 லட்சம் வருமானமாக கிடைத்துள்ளது. இந்த ஆண்டு பிரம்மோற்சவ விழாவில் 30 லட்சம் லட்டுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

இந்த விழாவில் 2 ஆயிரத்து 800 பறக்கும்படை ஊழியர்கள், 4 ஆயிரத்து 500 போலீசார் உள்ளிட்டோர் பணியாற்றினர். புத்தகங்கள் விற்பனை செய்யப்பட்டதன் மூலம் ரூ.57 லட்சத்து 79 ஆயிரம் வருமானமாக கிடைத்துள்ளது.

இந்த பிரம்மோற்சவ விழா ஸ்ரீவெங்கடேஸ்வரா பக்தி சேனல், ‘யு டிபூப்’ மூலம் 10 லட்சத்து 84 ஆயிரம் பேர் பார்த்துள்ளனர்.

Tirupati Brahmotsavam festival celebrated with lakhs of people.

அடுத்த செய்தி