ஆப்நகரம்

திருமலையில் பிளாஸ்டிக் பயன்படுத்த தடை: மீறுவோருக்கு ரூ. 25,000 வரை அபராதம்

திருமலையில் நாளை முதல் பிளாஸ்டிக் பயன்படுத்த தடை விதித்து தேவஸ்தானம் அறிக்கை

Samayam Tamil 31 Oct 2018, 12:54 pm
திருப்பதி ஏழுமலையான் கோயில் அமைந்திருக்கும் திருமலையில், பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்த தடை அறிவிக்கப்பட்டுள்ளது. உத்தரவை மீறுவோருக்கு அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
Samayam Tamil Tirumala_090615
திருப்பதி திருமலையில் பிளாஸ்டிக் பயன்படுத்த தடை அறிவிப்பு


கடந்த அக்டோபர் 2ம் தேதி, ஆந்திராவின் திருப்பதி மாவட்டத்தில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்த தடை அறிவிக்கப்பட்டது. அதை தொடர்ந்து நாளை முதல் திருப்பதியின் திருமலையில் பிளாஸ்டிக் பயன்பாட்டுக்கு தடை விதிக்கப்ப்டுவதாக தெரிவித்துள்ளது.

இதுகுறித்து தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், திருமலையில் வரும் நவம்பர் 1 முதல் பிளாஸ்டிக் பயன்படுத்த தடை விதிக்கப்பட்கிறது. உத்தரவை மீறுவோருக்கு ரூ. 5000 முதல் ரூ. 25,000 வரை அபராதம் வசூலிக்கப்படும்.

திருமலையில் இயங்கும் கடைகளில் பிளாஸ்டிக் பொருட்களை விற்பனை செய்யும் கடைகளின் உரிமும் ரத்து செய்யப்படும். சுற்றுச்சூழலை பாதுகாக்கும் நோக்கில் தேவஸ்தானத்தில் இந்த முடிவுக்கு பக்தர்கள், கடை உரிமையாளர்கல் ஒத்துழைக்க வேண்டும்.

இந்த உத்தரவை திருமலைக்கு வரும் அனைவரும் கவனத்தில் கொண்டு பின்பற்ற வேண்டும் என திருப்பதி தேவஸ்தானம் விடுத்துள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி