ஆப்நகரம்

பக்தர்களின் நீண்ட நாள் ஆசை, திருப்பதியில் விரைவில் அமையப்போகிறது..!

திருமலையில் பக்தர்களின் வசதிக்காக பல அடுக்குகளில் கார்களை நிறுத்துமிடத்தை அமைப்பதை குறித்து தேவஸ்தானம் ஆலோசித்து வருகிறது.

Samayam Tamil 2 Mar 2021, 10:56 am
கொரோனா ஊரடங்கிற்கு பிறகு திருப்பதி தேவஸ்தானம் இயல்பு நிலைக்கு மாறியுள்ளது. பல மாநிலங்களில் இருந்தும் வழக்கம்போல பக்தர்கள் வந்து செல்கின்றனர். இந்நிலையில், பக்தர்களுக்கு அவ்வப்போது சிறப்பு அறிவிப்புகளை தேவஸ்தானம் வெளியிட்டு வருவதுடன் புதிய வசதிகளை குறித்தும் ஆலோசித்து வருகிறது.
Samayam Tamil tirupati temple


இந்நிலையில், தேவஸ்தான அலுவலகத்தில் அனைத்து துறை அதிகாரிகளுடன் சிறப்பு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தை தேவஸ்தான செயல் அதிகாரி ஜவஹர் ரெட்டி தலைமையேற்று நடத்தினார். அப்போது பேசியவர், திருப்பதி கோயிலுக்கு பல மாநிலங்களில் இருந்து பக்தர்கள் வருகின்றனர்.

அவர்கள் தங்களது வாகனங்களை நிறுத்த சிரமம் இருந்து வருகிறது. அதை குறைக்க, அலிபிரி, திருமலையில் பக்தர்களின் கார்களை பல அடுக்குளில் நிறுத்துவதற்கு ஏதுவான இடம் அமைக்க வேண்டும் என கூறினார். அதன்படி, திருமலையில் விரைவில் பார்க்கிங் சிரமம் நீங்கும் என எதிர்பார்க்கலாம்.

ஊசி போட வந்த நர்ஸை கிண்டல் செய்த பிரதமர் மோடி: மருத்துவமனையில் சுவாரஸ்யம்!

திருப்பதியில், மார்ச் மாதத்துக்கான ஆர்ஜித சேவை டிக்கெட்டுகள் காணொலி காட்சி முறையில் கடந்த மாத இறுதியில் தேவஸ்தானம் இணையதளத்தில் வெளியிடப்பட்டது. அதில் பக்தர்கள் முன்பதிவு செய்து கொண்டு ஏழுமலையானை தரிசிக்கலாம்.

மேலும் கல்யாண உற்சவ டிக்கெட் முன்பதிவு செய்த பக்தர்களுக்கு மட்டும் (2 பேருக்கு) 90 நாட்களுக்குள் தேவஸ்தானம் இலவச விரைவு தரிசனத்தை அளித்து வருவது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி