ஆப்நகரம்

மூன்றே நாளில் இத்தனை கோடியா? அசர வைத்த திருப்பதி உண்டியல் வசூல்!

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கடந்த மூன்று நாட்களில் மட்டும் ரூ.9 கோடிக்கு மேல் உண்டியல் காணிக்கை வசூலாகியுள்ளது

Samayam Tamil 29 Dec 2020, 8:19 pm
திருப்பதி திருமலையில் வீற்றிருக்கும் ஏழுமலையானுக்கு லட்சக்கணக்கான பக்தர்கள் இருக்கின்றனர். வெளிமாநிலங்கள் மட்டுமல்லாது வெளி நாடுகளில் இருந்து பக்தர்கள் வருகை புரிந்து சாமி தரிசனம் செய்கின்றனர். இக்கோயிலில் நாள்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்து காணிக்கை செலுத்துவர். திருப்பதி ஏழுமலையான் பணக்கார சுவாமிகளில் ஒருவராக அறியப்படுகிறார்.
Samayam Tamil கோப்புப்படம்
கோப்புப்படம்


கொரோனா காரணமாக பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதி மறுக்கப்பட்ட திருப்பதி கோயிலில் தற்போது பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். முதலில் 6000 பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வந்த நிலையில், இந்த எண்ணிக்கை படிப்படியாக உயர்ந்து தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்றி தற்போது 30,000 பக்தர்கள் வரை அனுமதிக்கப்படுகின்றனர்.

இதனிடையே, திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வைகுண்ட ஏகாதசி நிகழ்வின் போது தொடர்ந்து 10 நாட்கள் வைகுண்ட வாசல் வழியாக பக்தர்களை அனுமதிக்க முடிவு செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டது. அதன்படி கடந்த 25ஆம் தேதி திறக்கப்பட்ட வைகுண்ட வாசல் வழியாக ஜனவரி 3 ஆம் தேதி வரை பக்தர்கள் அனுமதிக்கப்பட உள்ளனர்.

இதற்கான ரூ.300 சிறப்பு தரிசன டிக்கெட்டுகள் ஆன்லைன் மூலமாக விற்கப்பட்டன. நாள்தோறும் 20 ஆயிரம் டிக்கெட்டுகள் மூலம் 10 நாட்களுக்கு 2 லட்சம் டிக்கெட்டுகள் ஏற்கனவே விநியோகம் செய்யப்பட்டு விட்டன.

கொரோனா தடுப்பூசி: விரைவில் நல்ல செய்தி-மத்திய அரசு அறிவிப்பு!

இந்த நிலையில், வைகுண்ட சொர்க்க வாசல் வழியாக கடந்த 3 நாட்களில் மட்டும் தரிசனம் செய்த பக்தர்கள், ரூ.9.43 கோடியை உண்டியலில் காணிக்கையாக செலுத்தி உள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

அடுத்த செய்தி