ஆப்நகரம்

திருப்பதி தொகுதி எம்.பி. கொரோனாவுக்கு பலி

கொரோனா நோய்த்தொற்றுக்கு சென்னையில் சிகிச்சை பெற்றுவந்த ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த திருப்பதி தொகுதி எம்.பி.யான துர்கா பிரசாத் ராவ் சிகிச்சை பலனின்றி இன்று (செப்டம்பர் 16) காலமானார்.

Samayam Tamil 16 Sep 2020, 10:48 pm
ஆந்திர மாநிலம் திருப்பதி தொகுதியின் எம்.பி.யாக இருந்தவர் துர்கா பிரசாத் ராவ் (63). ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் எம்.பி.யான இவருக்கு அண்மையில் காய்ச்சல் ஏற்பட்டது.
Samayam Tamil tirupati mp


இதையடுத்து அவர், சென்னை, கிரீம்ஸ் சாலையில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் நேற்று முன்தினம் (செப்.14) அனுமதிக்கப்பட்டார். அங்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் அவருக்கு கொரோனா நோய்த்தொற்று கண்டறியப்பட்டது.

இதனையடுத்து, கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த அவருக்கு இன்று திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டது. அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தபோதும், சிகிச்சை பலனின்றி துர்கா பிரசாத் ராவ் உயிரிழந்தார்.

நாடாளுமன்ற கூட்டத்தில் கலந்து கொண்ட அமைச்சருக்கு கொரோனா: பீதியில் எம்.பி.க்கள்!

கொரோனாவுக்கு பலியான எம்.பி.யின் குடும்பத்துக்கு ஆந்திர மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி இரங்கல் தெரிவித்துள்ளார்.

உத்தரப் பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் அமைச்சரவையில் அங்கம்வகித்து வந்த பெண் அமைச்சர் கமல் ராணி வருண், கொரோனாவுக்கு கடந்த மாதம் பலியானார் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி