ஆப்நகரம்

ஒரேநாளில் இவ்வளவு பணமா? ஆச்சரியப்படுத்திய திருப்பதி உண்டியல்!

கொரோனா ஊரடங்கிற்கு பின் திறப்பட்ட திருப்பதி கோயில் உண்டியலில் முதல்முறை அதிகளவு வசூல் குவிந்துள்ளது.

Samayam Tamil 8 Sep 2020, 6:56 am
ஆந்திர மாநிலம் திருப்பதி திருமலையில் உலகப் பிரசித்தி பெற்ற ஏழுமலையான் கோயில் அமைந்துள்ளது. இதைத் தரிசிக்க பல்வேறு மாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். உலகமே கொரோனாவால் முடங்கியிருக்கும் சூழலில் திருப்பதி கோயிலும் விதிவிலக்கல்ல. கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் வகையில் திருப்பதி கோயிலில் பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. ஆனால் வழக்கமான பூஜைகள் மட்டும் நடத்தப்பட்டு வந்தன. பக்தர்கள் வராததால் கோயில் வருமானம் பெரிதும் பாதிக்கப்பட்டது. இதனால் ஊழியர்களுக்கு சம்பளம் கூட கொடுக்க முடியாமல் தேவஸ்தான நிர்வாகம் தவித்து வந்தது.
Samayam Tamil Tirupati Temple


ஏழுமலையான் தரிசனத்திற்கு கிடைக்கும் லட்டு பிரசாத விற்பனையும் ஊரடங்கால் பாதிக்கப்பட்டது. இதனைப் போக்கும் வகையில் பல்வேறு மாநிலங்களுக்கு நேரடியாக பிரசாதம் அனுப்பி விற்பனை செய்யப்பட்டது. இதற்கிடையில் நாடு முழுவதும் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வந்தன. அந்த வகையில் கடந்த ஜூன் 11ஆம் தேதி திருப்பதி கோயிலில் பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டது.

இமயமலையில் ஏழுமலையான் கொடுக்கும் சர்ப்ரைஸ்; ரெடியான திருப்பதி தேவஸ்தானம்!

வைரஸ் பரவலைத் தடுக்கும் வகையில் உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதையடுத்து பக்தர்கள் கூட்டம் படிப்படியாக அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. தேவஸ்தான இணையதளத்தில் ரூ.300 சிறப்பு தரிசன டிக்கெட் தினமும் 10 ஆயிரம் பேருக்கு வழங்கப்பட்டு வருகிறது. மேலும் திருப்பதி பூதேவி கவுன்ட்டரில் 3,000 டிக்கெட்கள் நேரடியாக வழங்கப்படுகின்றன.

அதுமட்டுமல்லாமல் ஸ்ரீவானி ட்ரஸ்டிற்கு ரூ.10 ஆயிரம் நன்கொடை வழங்குவோருக்கு சுமார் 1,000 டிக்கெட்கள் அளிக்கப்படுகின்றன. இதன்மூலம் ஏழுமலையானைத் தரிசிக்க நாள்தோறும் 14,000 தரிசன டிக்கெட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் கடந்த சனிக்கிழமை அன்று திருப்பதி கோயில் உண்டியல் வசூல் ரூ.1.02 கோடியாக இருந்தது.

சொன்னா நம்ப மாட்டீங்க; திருப்பதி கோயிலில் நடந்த ஆச்சரியம்!

அதாவது ஊரடங்கிற்கு பின் முதல்முறையாக ஒரு கோடி ரூபாயைத் தாண்டி காணிக்கை கிடைத்துள்ளது. அன்றைய தினம் 13,486 பக்தர்கள் கோயிலில் சாமி தரிசனம் செய்துள்ளதாக தெரியவந்துள்ளது. இது திருப்பதி திருமலை தேவஸ்தானத்தை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

அடுத்த செய்தி