ஆப்நகரம்

தீபாவளி அன்று திருப்பதியில் ரூ. 3.13 கோடி வசூல், 70,713 பேர் சாமி தரிசனம்

திருப்பதி ஏழுமலையான் கோயிலில், தீபாவளியை முன்னிட்டு ரு. 3.13 கோடி உண்டியல் காணிக்கை சேர்ந்துள்ளது.

Samayam Tamil 7 Nov 2018, 1:01 pm
தீபாவளி நாளில், திருப்பதியில் 70,713 பேர் சாமி தரிசனம் செய்துள்ளதாகவும், அதன்மூலம் ரூ. 3.13 கோடி உண்டியல் காணிக்கை செலுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Samayam Tamil tirupati-balaji-1474428136


தீபாவளி பண்டிகை நாளில், திருப்பதியில் உள்ள ஏழுமலையானை வழிபட பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும். அதேபோல இந்தாண்டு தீபாவளி அன்றும், திருப்பதியில் பக்தர்கள் அதிகளவில் குவிந்தனர்.

இலவசம் தரிசனத்திற்கான வரிசையில், வைகுண்டம் காம்பிளக்ஸ் வரை, சுமார் 12 மணி நேரங்கள் பக்தர்கள் காத்திருந்து சாமி தரிசனம் செய்ததாக தேவஸ்தானம் சார்பில் கூறப்பட்டுள்ளன.

மேலும், திருமலைப்பாதை வழியாக நடந்தே சென்று திவ்ய தரிசன்ம் பெற்ற பக்தர்கள், 11 மணி நேரமும், ரூ.300 கட்டணம் செலுத்து டிக்கெட் பெற்ற பக்தர்கள் 5 மணிநேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்துள்ளனர்.

அதன்படி, தீபாவளி நாளான நேற்று மட்டும் சுமார் 70,713 பக்தர்கள் திருப்பதி ஏழுமலையான வழிப்பட்டுள்ளனர். அவர்கள் மூலம், நேற்று ஒரேநாளில் ரூ. 3.14 கோடி உண்டியல் காணிக்கை வசூலாகியுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி