திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கடந்த இரண்டு மாதத்தில் அர்ச்சகர்கள், ஊழியர்கள் உப்பட 743 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருப்பதி தேவஸ்தான நிர்வாகக் கூட்டம் இன்று நடைபெற்றது. இதன்பின் திருப்பதி தேவஸ்தான நிர்வாக அதிகாரி அனில்குமார் சிங்கால் செய்தியாளர்களிடம் பேசினார்.
அப்போது அவர், “திருமலை திருப்பதி தேவஸ்தான அர்ச்சகர்கள், ஊழியர்கள் ஆகியோரில் 743 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்ட நிலையில், 402 பேர் சிகிச்சைக்கு பின் குணமடைந்து வீடு திரும்பின விட்டனர்.
திருப்பதி: தலைமை அர்ச்ச்கர் கொரோனாவால் மரணம்
தற்போது 338 பேர் சிகிச்சை பெறுகின்றனர். மொத்தம் 3 பேர் உயிரிழந்துவிட்டனர். மேலும் கடந்த ஜூலை மாதத்தில் திருப்பதி ஏழுமலையானை 2 லட்சத்து 38 ஆயிரம் பக்தர்கள் வழிபட்டு 16 கோடியே 69 லட்சம் ரூபாய் காணிக்கை செலுத்தி உள்ளனர்.
கடந்த இரண்டு மாதத்தில் 11 லட்சத்து 35 ஆயிரம் லட்டுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. எவ்வித தடையுமின்றி பக்தர்கள் தொடர்ந்து ஏழுமலையான் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள்” என்று தெரிவித்தார்.
திருப்பதி தேவஸ்தான நிர்வாகக் கூட்டம் இன்று நடைபெற்றது. இதன்பின் திருப்பதி தேவஸ்தான நிர்வாக அதிகாரி அனில்குமார் சிங்கால் செய்தியாளர்களிடம் பேசினார்.
அப்போது அவர், “திருமலை திருப்பதி தேவஸ்தான அர்ச்சகர்கள், ஊழியர்கள் ஆகியோரில் 743 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்ட நிலையில், 402 பேர் சிகிச்சைக்கு பின் குணமடைந்து வீடு திரும்பின விட்டனர்.
திருப்பதி: தலைமை அர்ச்ச்கர் கொரோனாவால் மரணம்
தற்போது 338 பேர் சிகிச்சை பெறுகின்றனர். மொத்தம் 3 பேர் உயிரிழந்துவிட்டனர். மேலும் கடந்த ஜூலை மாதத்தில் திருப்பதி ஏழுமலையானை 2 லட்சத்து 38 ஆயிரம் பக்தர்கள் வழிபட்டு 16 கோடியே 69 லட்சம் ரூபாய் காணிக்கை செலுத்தி உள்ளனர்.
கடந்த இரண்டு மாதத்தில் 11 லட்சத்து 35 ஆயிரம் லட்டுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. எவ்வித தடையுமின்றி பக்தர்கள் தொடர்ந்து ஏழுமலையான் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள்” என்று தெரிவித்தார்.