ஆப்நகரம்

24 வருடங்களாக திருப்பதியில் நாதஸ்வரம் வாசிக்கும் இஸ்லாமியர்கள்

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இஸ்லாமிய சகோதரர்கள் கடந்த 24 வருடங்களாக ஆஸ்தான நாதஸ்வர வித்வான்களாக கலை சேவையாற்றி வருகின்றனர்.

Samayam Tamil 19 Sep 2018, 10:36 am
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இஸ்லாமிய சகோதரர்கள் கடந்த 24 வருடங்களாக ஆஸ்தான நாதஸ்வர வித்வான்களாக கலை சேவையாற்றி வருகின்றனர்.
Samayam Tamil nnn


ஆந்திராவில் உள்ள பிரகாசம் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் காசிம் மற்றும் பாபு சகோதரர்கள். இவர்களின் தந்தை ஷேக் சின்ன மவுலானா பிரபலமான நாதஸ்வர வித்வான். மேலும் இவர் மத்திய அரசின் பத்மஸ்ரீ விருது பெற்றவர். காசிம் மற்றும் பாபு சகோதரர்கள், 7 வயதில் இருந்து தங்களது தந்தையிடம் நாதஸ்வரம் கற்க தொடங்கினர்.

17 வயதில் தனியாக நாதஸ்வரம் வாசிக்க தொடங்கினர். அதன்பிறகு திருப்பதி தேவஸ்தானத்தில் நாதஸ்வரம் வாசிக்க தொடங்கினர். இவர்களின் அர்பணிப்பை மதித்து 1996ம் ஆண்டு, கோயிலின் ஆஸ்தான விதவான்களாக அறிவித்தது திருப்பதி தேவஸ்தானம்.

திருப்பதி கோயிலில் நடைபெறும் பிரம்மோற்சவம், ரத சப்தமி, ஆனி ஆஸ்தானம், தெலுங்கு வருடப்பிறப்பு என்று எல்லா விசேஷங்களுக்கும் இஸ்லாமிய சகோதரர்கள்தான் நாதஸ்வரம் வாசித்து வருகின்றனர்.

மேலும் இவர்களுக்கு தமிழக அரசு கலைமாமணி விருது கொடுத்து கெளரவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி