ஆப்நகரம்

டெல்லி தீஸ் ஹசாரி நீதிமன்ற மோதல்: வழக்கறிஞர்கள் போராட்டம் வாபஸ்

டெல்லி தீஸ் ஹசாரி நீதிமன்றத்தில் வாகனம் நிறுத்துவது தொடர்பாக போலீசார் மற்றும் வழக்கறிஞர்கள் இடையே ஏற்பட்ட மோதலில் 20 போலீசாரும் 8 வழக்கறிஞர்களும் காயமடைந்தனர்

Samayam Tamil 15 Nov 2019, 7:48 pm
டெல்லி: நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞர்கள் மீது போலீசார் நடத்திய தாக்குதலை கண்டித்து நடைபெற்று வந்த போராட்டத்தை வாபஸ் பெறுவதாக டெல்லி அனைத்து மாவட்ட நீதிமன்றங்கள் பார் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு அறிவித்துள்ளது.
Samayam Tamil வழக்கறிஞர்கள் போராட்டம்
வழக்கறிஞர்கள் போராட்டம்


டெல்லி தீஸ் ஹசாரி நீதிமன்றத்தில் கடந்த 2ஆம் தேதி வாகனம் நிறுத்துவது தொடர்பாக போலீசார் மற்றும் வழக்கறிஞர்கள் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் வன்முறையாக மாறியது. அந்த கலவரத்தில் 20 போலீசாரும் 8 வழக்கறிஞர்களும் காயமடைந்தனர். 20க்கும் மேற்பட்ட வாகனங்கள் தீக்கிரையாக்கப்பட்டன.

வழக்கறிஞர்கள் தற்கொலை முயற்சி... டெல்லி நீதிமன்ற வளாகத்தில் பரபரப்பு!!

கலவரம் தொடர்பாக தாமாக முன்வந்து விசாரணை நடத்திய டெல்லி உயர் நீதிமன்றம், வன்முறை சம்பவம் குறித்து 6 வாரத்துக்குள் விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய ஓய்வு பெற்ற நீதிபதி எஸ்.பி.கார்க்கை நியமித்து உத்தரவிட்டுள்ளது. அத்துடன், டெல்லி காவல்துறை அதிகாரிகள் இருவரை பணியிடமாற்றம் செய்தும் நீதிமன்றம் உத்தரவிட்டது.

வழக்கறிஞர் மீது போலீஸ் துப்பாக்கிச் சூடு..! டெல்லியில் பரபரப்பு..

இதனிடையே வழக்கறிஞர்கள் மீதான தாக்குதலை கண்டித்து நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டத்தில் வழக்கறிஞர்கள் சங்கங்கள் ஈடுபட்டன. டெல்லியில் 6 மாவட்ட நீதிமன்ற வழக்கறிஞர்கள் கடந்த 4ஆம் தேதியில் இருந்து பணி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

இந்நிலையில், தங்களது போராட்டத்தை வாபஸ் பெறுவதாக அறிவித்துள்ள டெல்லி அனைத்து மாவட்ட நீதிமன்றங்கள் பார் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு, நவம்பர் 16ஆம் தேதி (நாளை) முதல் வழக்கறிஞர்கள் பணிக்கு திரும்புவர் எனவும் தெரிவித்துள்ளது.

டெல்லி காவல்துறை தலைமையகத்தில் போலீசார் போராட்டம்

முன்னதாக, நீதிமன்ற வளாகத்தில் போலீசார் மீது வழக்கறிஞர்கள் நடத்திய தாக்குதலை கண்டிக்கும் விதமாக டெல்லி காவல்துறை தலைமையகத்தில் போலீசார் கைகளில் பதாகைகளை ஏந்தி கடந்த 5ஆம் தேதியன்று போராட்டத்தில் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி