ஆப்நகரம்

சபரிமலையின் தலைமை பூசாரியான டி.எம்.உன்னிகிருஷ்ணன்!

சபரிமலை கோயிலின் தலைமை பூசாரியாக பாலக்காடைச்சேர்ந்த டி.எம்.உன்னிகிருஷ்ணன் தேர்வு செய்யப்பட்டார்.

TOI Contributor 17 Oct 2016, 2:18 pm
சபரிமலை: சபரிமலை கோயிலின் தலைமை பூசாரியாக பாலக்காடைச்சேர்ந்த டி.எம்.உன்னிகிருஷ்ணன் தேர்வு செய்யப்பட்டார்.
Samayam Tamil tm unnikrishnan namboothiri is new sabarimala head priest
சபரிமலையின் தலைமை பூசாரியான டி.எம்.உன்னிகிருஷ்ணன்!


சபரிமலை ஐயப்பன் கோயிலின் தலைமை பூசாரி பதவிக்காக சுமார் 105 பேர் விண்ணப்பித்திருந்தனர். இதில் இருந்து சுமார் 15 பேரின் விண்ணப்பம் மெயின் கோயிலுக்கும், 11 பேரின் விண்ணப்பம் மல்லிகாபுரம் கோயிலுக்கும் இறுதிப்பட்டியலாக தேர்வு செய்யப்பட்டது.

<iframe width="560" height="315" src="https://www.youtube.com/embed/5Q1vUiuHzDs" frameborder="0"></iframe>

இதில் இருந்து ஒருவரை பந்தலம் மாளிகைச்சேர்ந்தவர்கள் தேர்வு செய்வார்கள். மலையாள மாதமான துலாம் மாதத்திற்காக சபரிமலையின் நடை திறக்கப்பட்டு வரும் அக்டோபர் 19 வரை சுவாமிக்கு நெய்வைத்தியங்களால் ஆராதணை செய்யப்படும். இதற்கு முன் தலைமை பூசாரியை தேர்வு செய்வது வழக்கம். இதன்படி டி.எம்.உன்னிகிருஷ்ணன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இன்னும் ஒரு வருடத்துக்கு இவர் தலைமை பொறுப்பில் நீடித்து பூஜைகளை மேற்கொள்வார் என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

அடுத்த செய்தி